துணிவு, வாரிசு படங்களின் காட்சிகள் திடீர் ரத்து : தமிழக அரசு உத்தரவு… ஏமாற்றத்தில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோர். இவர்கள் இருவரின் திரைப்படமும் ஒரே நாளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (11.01.2023) வெளியாக உள்ளது.

அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள், ட்ரைலர் உள்ளிட்டவை வெளியாகி மக்கள் மத்தியில் விறுவிறுப்பை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ரிலீஸ் நாளையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இயக்குனர் H வினோத்துடன் துணிவு திரைப்படம் மூலம் இணைந்துள்ளார் நடிகர் அஜித். அதே போல, இந்த மூன்று படங்களையும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கென், வீரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிந்துள்ளார்.

துணிவு திரைப்படத்தை போலவே, விஜய்யின் திரைப்படமான “வாரிசு” கூட 11.01.2023 அன்று வெளியாக உள்ளது. வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். இந்த படத்தில், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஜெயசுதா, பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அஜித் மற்றும் விஜய் என இரண்டு பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால், இருவரின் ரசிகர்களும் உச்சகட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர். அதே போல, ரசிகர்கள் மத்தியில் ஒரு சிறு போட்டியும் கூட உருவாகி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் நாளை படங்களை வெளியாவதை முன்னிட்டு விஜய், அஜித் ரசிகர்கள் கோலாகலத்துடன் வரவேற்க காத்துக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக அரசு புதிய உத்தரவு போட்டுள்ளது. அதில் ஜனவரி 13 முதல் 16ஆம் தேதி வரை அதிகாலை சிறப்பு காட்சிகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் கட்அவுட்டுகளுக்கு பால் ஊற்றி கொண்டாட அனுமதியில்லை என்றும் உத்தரவு அளித்துள்ளது. குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாட்களுக்கு அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி அதிகாலை சிறப்பு காட்சிகளை ரத்து செய்துள்ளது.

ஏற்கனவே 11ஆம் தேதி படம் வெளியாக உள்ளதால், 11 மற்றும் 12ஆம் தேதிகளுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அனைத்து மாவட்டங்களுக்கு இந்த சுற்றறிக்கையை தமிழக அரசு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

6 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

6 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

6 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

7 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

8 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

9 hours ago

This website uses cookies.