விடிஞ்சா தேர்தல்.. கிளாம்பாக்கத்தில் திமுக அரசுக்கு எதிராக நள்ளிரவில் நடந்த திடீர் போராட்டம்.!!

விடிஞ்சா தேர்தல்.. கிளாம்பாக்கத்தில் திமுக அரசுக்கு எதிராக நள்ளிரவில் நடந்த திடீர் போராட்டம்.!!

தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஏப்ரல் 17, 18-ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் உட்பட 10,214 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டது.

பயணிகளின் வசதிக்காக நேற்று சென்னையில் இருந்து வழக்கமான 2,092 பேருந்துகளுடன் 1,785 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும், பயணிகள் கூட்டம் பேருந்து நிலையத்தில் அலை மோதியது.

குறிப்பாக கடலூர், சிதம்பரம், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் நடைமேடைகளில் மக்கள் கூட்டம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது.

கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து பஸ்களிலும் கூட்ட நெரிசல் காணப்பட்டதால் ஒவ்வொரு பஸ்சில் பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு ஏறியதை காண முடிந்தது. தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஏப்ரல் 17, 18-ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் உட்பட 10,214 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டது.

பயணிகளின் வசதிக்காக நேற்று சென்னையில் இருந்து வழக்கமான 2,092 பேருந்துகளுடன் 1,785 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட்டது. பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும், பயணிகள் கூட்டம் பேருந்து நிலையத்தில் அலை மோதியது.

மேலும் படிக்க: உங்க கிட்ட நான் கேட்கறது ஒண்ணே ஒண்ணுதான் : வாக்களித்த பின் கோவை அதிமுக வேட்பாளர் வேண்டுகோள்!

சொந்த ஊர்களுக்கு செல்ல குவிந்த பயணிகள் போதிய பேருந்துகள் இல்லை என்று கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் குறைவாகவே வழக்கமாக இயக்கப்படும். தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

எனினும், பெரும்பாலான பேருந்துகள் முன்பதிவு செய்யப்பட்டன. இதனால், கிளாம்பாக்கத்திற்கு வந்த பயணிகள் பேருந்துகள் கிடைக்காததால் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் பேருந்துகள் கிடைக்காத ஆத்திரத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் பயணிகள் ஈடுபட்டதால், அங்கு வந்த போலீசார், பயணிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாற்று பேருந்து ஏற்பாடுகளை செய்தனர். எனினும், கிளம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தில் விடிய விடிய பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.