செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு மனுவை விசாரித்தது.
செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும், அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஆஜராகினர்.
இதில், செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கை வேறு நாளுக்கு ஒத்திவைக்கலாம் என வழக்கறிஞர் இளங்கோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அதிகாரம் இல்லை என்ற எனது தீர்ப்பில் உறுதியாக உள்ளதாக நீதிபதி நிஷா பானு தெரிவித்தார். அத்துடன், இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு கையில் எடுத்தபின், நாங்கள் ஏன் வழக்கை நிலுவையில் வைத்திருக்க வேண்டும் என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
அனைத்து அம்சங்களையும் சுப்ரீம் கோர்ட்டு முடிவெடுக்கும் போது, இந்த வழக்கை முடித்துவைக்கலாம் என்றும், சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கில் முடிவெடுக்கட்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, வழக்கை சென்னை ஐகோர்ட்டு முடித்துவைத்தது. அத்துடன், செந்தில் பாலாஜி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.