கரும்பு விவசாயி சின்னம் முடக்கம்.. புதிய சின்னத்தில் நாம் தமிழர் போட்டி : சம்மதம் சொன்ன சீமான்? பரபரப்பு பேச்சு!
கரும்பு விவசாயி சின்னம் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் சீமான் கூறியதாவது, சட்டத்தின் படி, சட்ட வரைமுறையின்படி கரும்பு விவசாயி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு தரப்பட்டிருக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே திட்டமிட்டே எங்கள் சின்னத்தை மற்ற கட்சிக்கு ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். சின்னத்தை வழங்க மறுப்பது என்பது எனக்கு அழுத்தம் தரும் முயற்சி. சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல்கள் என 6 தேர்தல்களை எதிர்கொண்டுள்ளோம்.
சின்னத்தை பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதில் உடன்பாடு எட்டவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்.
புதிய சின்னம் அறிவிக்கப்பட்டாலும் தற்போதைய அறிவியல் உலகத்தில் அதனை சேர்ப்பது கொண்டு என்பது ரொம்ப எளிதானது. ஆனால், நிச்சயமாக கரும்பு விவசாயி சின்னத்தை பெறுவோம் என தெரிவித்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.