சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நுபுர் சர்மா தேசத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே மாதம் ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நுபுர் சர்மா, நபிகள் நாயகத்தை அவமதித்து பேசியதாகக் கூறப்பட்டது. அவரது இந்தப் பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பும் கிளம்பியது. மேலும், வன்முறை மற்றும் கலவரம் வெடித்தது.
அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த தையல்காரரை இஸ்லாமியர்கள் இருவர் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, தனக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் இருக்கும் வழக்குகளை
டெல்லிக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நுபுர் ஷர்மாவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சர்ச்சைக்குரிய தனது கருத்திற்கு தொலைக்காட்சியின் முன்பு தோன்றி, தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
மேலும், நாட்டு மக்களால் நுபுர் சர்மாவுக்கு அச்சுறுத்தலா அல்லது நுபுர் சர்மாவால் நாட்டுக்கு அச்சுறுத்தலா..? என்றும், நுபுர் சர்மாவுக்கு எதிராக பல்வேறு புகார்கள் வந்ததே, அதை டெல்லி போலீஸ் தொட்டுக்கூட பார்க்கவில்லை என்றுக் கூறிய நீதிபதிகள், நுபுர் சர்மா அளித்த புகாருக்கு உடனே ஒருவரைக் கைது செய்திருக்கிறீர்கள் என்று டெல்லி காவல்துறையையும் கண்டித்துள்ளனர்.
மேலும், ஜனநாயகம் அனைவருக்கும் பேச்சுரிமையை வழங்கியுள்ளதாகவும், ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பதாலேயே எதையும் சொல்லிவிட முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
உதய்பூரில் நடந்த தையல்காரரின் கொலைக்கு நுபுர் சர்மாவின் பொறுப்பற்ற செயல்களே காரணம் என்றும், நுபுர் சர்மா நடந்து கொண்ட விதம், அதன்பிறகு அவரது வழக்குரைஞர் சொல்வதும் பொறுப்பற்றதாக உள்ளதாக உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.