நீட் மறுதேர்வு இல்லை; நீட் தேர்வு முடிவை ரத்து செய்ய வேண்டாம்;உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில், வினாத்தாள் கசிவு உட்பட பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, 40 க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கை நேற்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு ஐஐடி மெட்ராஸ் வழங்கிய அறிக்கையை நாங்கள் ஆய்வு செய்து இருக்கிறோம். நடப்பு ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யும் அளவிற்கு போதுமான தரவுகள் இல்லை. நீட் தேர்வில் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் மீறும் நிகழ்வுகள் நடந்துள்ளது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் தற்போது வரை சமர்ப்பிக்கப் படவில்லை.

எனவே நீட் மறுதேர்வு நடத்தப்படாது. நீட் தேர்வு கருணை மதிப்பெண்கள் விவகாரத்தில் மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் தனிப்பட்ட முறையில் அவர்கள் அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களை நாடலாம்” இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

நீட் தொடர்பான குளறுபடிகளை சரி செய்ய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். இனி இதுபோன்ற சிக்கல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க செயல்முறைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

இந்தத் தீர்ப்பினை குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிடும்போது நீட் தேர்வு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் மூலம் பலரின் யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.மற்றும் உண்மை வென்றுள்ளது.மாணவர்களின் நலன் காக்கும் தீர்ப்புக்கு நன்றி,தேர்வு முறைகளைப் பற்றி குறை கூறியவர்களின் கண்கள் தீர்ப்பின் மூலம் திறக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.