சென்னை ; அரசியல் முதிர்ச்சி மற்றும் அனுபவமற்றவரை தமிழகத்தில் பாஜக தலைமையில் அமர்த்தியது தான் தவறு என்று நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்திய பின் நடிகர் எஸ்வி சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- தமிழகத்தில் மாநில பாஜகவுடன் இருந்த கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறிவிட்டது. இதனால் மோடிக்கு எந்த பாதிப்பும் இல்லை. மூன்றாவது முறையாக நரேந்திர மோடி இந்தியாவின் ஹாட்ரிக் பிரதமராக வருவது உறுதி. ஏனென்றால் இந்த கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்நாடு அவருக்கு பெரிய அளவில் உதவி செய்ய போவது இல்லை.
அரசியல் முதிர்ச்சி மற்றும் அனுபவமற்றவரை தமிழகத்தில் பாஜக தலைமையில் அமர்த்தியது தான் தவறு. மத்திய பிரதேச தேர்தல்களில் அண்ணாமலை பார்வையாளராக மாற்றப்படுவார். விரைவில் அண்ணாமலை தமிழக பாஜகவின் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றப்படுவார். தமிழகத்தில் அண்ணாமலை பாஜக தலைவராக இருக்கும் போது, பாஜக ஜெயிக்கும் சீட்டுகள் பூஜ்யமாக தான் இருக்கும்.
அனைத்து ரசிகர் மன்றங்களைக் அழைத்து ஒரு கட்சிக்கு தேவையான அமைப்புகளை நடிகர் விஜய் கொண்டு வருகிறார். அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்று சொல்ல முடியாது. லியோ இசை வெளியீட்டு விழா நிறுத்தப்பட்டதா அல்லது நிறுத்தினார்களா என்ற இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது, நிறுவனமே அவர்களே நிறுத்தியதாக தான் தெரிவித்து உள்ளனர், என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.