தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி மாற்றம்? ராஜஸ்தானில் முக்கிய முடிவு… இளம் தலைவர் தேர்வாக வாய்ப்பு?!!

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரது 3 ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்து 10 மாதங்கள் ஆகி உள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற மோதல் விசுவரூபம் எடுத்தது. 2 வட்டார தலைவர்கள் நியமனத்தில் அதிருப்தி அடைந்த நெல்லை மாவட்ட காங்கிரசார் சத்திய மூர்த்தி பவனுக்கு வந்து அழகிரியிடம் நியாயம் கேட்டனர்.

அப்போது அழகிரி ஆதரவாளர்களுக்கும், ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பாக அழகிரி ஆதரவாளரான ரஞ்சன்குமார் மீதும் ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. மீதும் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

தொகுதி நிகழ்ச்சிகள் காரணமாக விசாரணைக்கு வர 15 நாட்கள் அவகாசம் கேட்டார் ரூபிமனோகரன். அதை ஒழுங்கு நடவடிக்கை குழு ஏற்கவில்லை. விசாரணைக்கு ஆஜராகும் வரை கட்சி பதவியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். ஆனால் ஒழுங்கு நடவடிக்கை குழு எடுத்த நடவடிக்கை தவறானது என்று மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சஸ்பெண்டு உத்தரவை நிறுத்தி வைத்தார்.

இதற்கிடையில் முன்னாள் மாநில தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆகியோர் டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து அழகிரியை மாற்றும்படி வலியுறுத்தினார்கள். அதே நேரம் 11 எம்.எல்.ஏ.க்கள் கார்கேவிடம் அழகிரிக்கு ஆதரவாக மனு கொடுத்தனர்.

ரூபிமனோகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. அதை உடனடியாக ரத்து செய்தது தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, தினேஷ்குண்டுராவ் ஆகியோரை டெல்லி மேலிடம் நேரில் அழைத்து விசாரித்தது.

இப்படி தொடரும் அதிரடி திருப்பங்களால் தமிழக காங்கிரஸ் பிரச்சினையை தீர்த்து வைக்க டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலமும் முடிந்து விட்டதால் புதிய தலைவரை நியமிக்கவும் முடிவு செய்துள்ளார்கள்.

புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த மூத்த தலைவர்களிடம் காங்கிரஸ் தலைமை கருத்து கேட்டுள்ளது. முன்னான் மத்திய மந்திரி ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ஆகியோரிடம் கருத்து கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொருவரிடமும் தகுதியான 5 பேரின் பெயர் பட்டியலை தயார் செய்து அனுப்பும்படி கேட்டுள்ளனர்.

ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பும் தலைவர்களின் பெயரை தயார் செய்து அனுப்பி உள்ளனர். மல்லிகார்ஜுன கார்கே நாளை ராஜஸ்தான் செல்கிறார். அங்கு வைத்து தமிழக பிரச்சினையை பேசி முடிவெடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் புதிய தலைவர் பற்றி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.