தமிழகத்தில் 3 கோடி புதிய ஸ்மார்ட் மீட்டர்.. புதிய டெண்டரை வெளியிட்டது தமிழக மின்சார வாரியம்!!

தமிழ்நாட்டில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் திட்டம் தொடர்கிறது. அதேசமயம் ஒரு மாதத்திற்கு 200 யூனிட் வரை பயன்படுத்தினால் ரூ.27.50-ம், 2 மாதங்களுக்கு 300 – 400 யூனிட் வரை பயன்படுத்தினால் ரூ.147.50 வரையிலும், 501 -600 யூனிட்கள் பயன்படுத்தினால் ரூ.155 வரையிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கிடுவதில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வீடுகளுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தும் பணியை தமிழ்நாடு மின்வாரியம் கையில் எடுத்தது. ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கான டெண்டர் செயல்முறை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை மாநிலம் முழுவதும் மூன்று தொகுப்புகளாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மின்மீட்டர் முறைகேட்டை தடுக்க ஸ்மார்ட் மீட்டர் வாங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ள என அமைச்சர் கூறியிருந்தார். அதன்படி, ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்தபின், வீடுகள்தோறும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் கூறியிருந்தார்.

முதல்கட்டமாக மேற்கு மாவட்டங்களில் சுமார் ஒரு கோடி ஸ்மார்ட் மீட்டர்களும், தென் மாவட்டங்களில் 80 லட்சம் மீட்டர்களும் பொருத்துவதற்கான டெண்டர் கோரப்பட்டது. அதில் பங்கேற்க, கடந்த 5ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. பின், டெண்டர் கடைசி தேதி, மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், ஸ்மார்ட் மின் மீட்டருக்கான டெண்டர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மின் வாரிய அதிகாரிகள், ஸ்மார்ட் மின் மீட்டர் டெண்டருக்கான விளக்க கூட்டத்தில் பங்கேற்ற 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 265 சந்தேகங்களை எழுப்பினர். நிறுவனங்கள் எழுப்பிய சந்தேகத்துக்கு ஏற்ப டெண்டர் விதிகளில் திருத்தங்கள் செய்ய வேண்டும். எனவே, நிறுவனங்கள் கேட்கும் விபரங்கள் இடம்பெறுவதுடன், மூன்று தொகுப்புகளாக நடைபெற இருந்த பணியை ஒரே தொகுப்பாக சேர்த்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான புதிய டெண்டர் விரைவில் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

இந்த நிலையில், பல்வேறு திருத்தங்களுடன் புதிய டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், டெண்டரில் தேர்வாகும் நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தம், பராமரிப்பு மேற்கொள்ள நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நான் தப்பான ஆள் இல்லை- பிரபல நடிகையின் விவகாரத்தில் விராட் கோலி திடீர் விளக்கம்…

வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…

4 minutes ago

படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு நடிக்க முடியாது.. படத்தில் இருந்து விலகிய சூப்பர் ஸ்டார்!

பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…

16 minutes ago

6 மணிக்கு மேல விஜய் வெளில வரமாட்டார்; இதுதான் ரகசியம்- வம்பிழுத்த அரசியல் பிரபலம்

தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி  விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…

52 minutes ago

நீ நடிகனாக இருக்கவே லாயக்கி இல்ல.. யோகி பாபுவை மேடையில் விட்டு விளாசிய தயாரிப்பாளர்!

விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…

1 hour ago

ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலையும் அமைச்சர்கள் ; CM சிறை செல்வார்.. அனல் பறக்க விட்ட பாஜக பிரமுகர்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…

2 hours ago

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

16 hours ago

This website uses cookies.