சென்னை : பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அலுவலகத்தின் உள்ளே பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த வினோத் என்பவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டு அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நீட் தேர்வு ரத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதால் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- தமிழக பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதன் பின்னணியில் திட்டமிட்ட சதி இருப்பதாக பாஜக கருதிகிறது. நீட் விவகாரத்தில் பாஜக நிலைப்பாட்டை எதிர்ப்பதாக கைது செய்யப்பட்டவன் வாக்குமூலம் என போலீசார் கூறுகின்றனர். ரவுடியின் வாக்குமூலம் என போலீசார் கூறுவது நம்பும்படியாக இல்லை. நீட் என்பதற்கு என்ன அர்த்தம் என கைதான ரவுடிக்கு தெரியுமா..? என நமக்கு தெரியவில்லை.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக என்னுடைய பாதுகாப்பைக் குறைத்தார்கள். ‘ஒய்’ பிரிவிலிருந்து ‘எக்ஸ்’ பிரிவுக்குக் கொண்டுபோனார்கள். என்னுடைய தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது. உடனிருக்கும் ஆட்களை வைத்து கண்காணிக்கிறார்கள்
பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக தேசிய தலைவர்கள் கவனத்தில் எடுத்துள்ளனர். பெட்ரோல் குண்டுகள் வீச்சு தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு விசாரணை சீர்குலைந்து போனதற்கு இதுவே உதாரணம், எனக் கூறினார்
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”…
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
This website uses cookies.