ஈரோட்டில் உச்சம் பெற்ற கொரோனா : சென்னையிலும் கொஞ்சம் ஓவர்தான் : கடந்த 24 மணி நேரத்தில் 1,245 பேருக்கு தொற்று உறுதி
Author: Babu Lakshmanan15 October 2021, 8:05 pm
சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் சற்று குறைந்துள்ளது.
கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று 1,245 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,84,641ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக, இன்று சென்னையில் 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் 139 பேருக்கும், செங்கல்பட்டுவில் 92 பேருக்கும், ஈரோட்டில் 91 பேருக்கும், திருப்பூரில் 74 பேருக்கும் உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,869 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,442 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 33 ஆயிரத்து 534 ஆக அதிகரித்துள்ளது.
0
0