அக்.,31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு : வாரச்சந்தைகளுக்கு அனுமதி…. கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளின் முழு விபரம்..!
29 September 2020, 7:40 pmசென்னை : 8வது கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், அக்.,31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 8வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்புகளை பொறுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 8வது கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில், மருத்துவக் குழுவினரின் பரிந்துரையின் பேரில், அக்.,31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இந்த 9வது கட்ட ஊரடங்கில் அரசு அறிவித்துள்ள தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளின் விபரங்கள் பின்வருமாறு :-