தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து நீடிக்கும் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் (முழு உரை)
2 February 2021, 12:39 pmசென்னை : தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து நீடிக்கும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உரையுடன் தொடங்கியது. பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்த ஆரம்பித்ததும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, திமுகவினர் அவையை வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக தலைப்பாகைகளுடன் பேரவையில் கலந்து கொண்டனர்.
எதிர்கட்சிகளின் வெளிநடப்பிற்கு பிறகு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தியதாவது :- தமிழகம் தொடர்ந்து 3 முறை நல்லாளுமைக்கான விருதை பெற்றுள்ளது. முதலமைச்சர் பழனிசாமியின் சிறப்பான நிர்வாகத்தை காட்டுகிறது
கொரோனா காலத்திலும் ரூ.60,674 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்திலும் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்த்த முதலமைச்சர் பழனிசாமிக்கு பாராட்டுக்கள்
தமிழகத்தில் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்குவது தொலைநோக்கு பார்வையுடனான திட்டம்
தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் அவர்களின் உரிமையை தமிழக அரசு உறுதி செய்யும்
அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் முதற்கட்ட பணிகள் மார்ச் மாதத்திற்கு முன்னர் நிறைவுபெறும்
பயிர் காப்பீடு திட்டத்திற்கான கூடுதல் செலவை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது
தமிழகத்தில் விரைவில் புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் கொள்கை வெளியிடப்படும்
காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதற்கட்டமாக காவிரி – தெற்கு வெள்ளாறு இணைப்பு துவங்கப்படும்
தமிழக மக்கள் இந்தியாவின் எந்த பகுதியிலும் ரேசன் கடைகளில் பொருட்களை பெற ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் உதவும்
உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி பெரியாறு ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதை அனுமதிக்கக் கூடாது
2021 நவம்பர் மாதத்திற்குள் தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும்
தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து நீடிக்கும்
மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே அரசின் சேவையை பெற 1100 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்
முதலமைச்சரின் உதவி மையம் எனும் ஒருங்கிணைப்பட்ட குறைதீர்ப்பு மையம் மூலம் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்
அனைத்து மக்களுக்கும் அரசு உரிய நேரத்தில் படிப்படியாக தடுப்பூசி வழங்கும் – தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி எனும் முதலமைச்சரின் அறிவிப்பிற்கு பாராட்டு
உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 81 திட்டங்கள் வணிக உற்பத்தியை தொடங்கி விட்டன. உலக முதலீட்டாளர் மாநாடு மூலமாக 2.42 லட்சம் பேருக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது
7.5% உள்ஒதுக்கீட்டால் நடப்பு ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 435 பேர் மருத்துவ படிப்பில் சேர்த்துள்ளனர். மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளதால், சமூகநீதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
கொரோனா நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு இதுவரை ரூ.13,208 கோடி செலவிடப்பட்டுள்ளது, எனத் தெரிவித்தார்.
0
0