நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்களிடையே கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்து பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்களால் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா களையிழந்து காணப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் பல்வேறு விநாயகர் கோவில்களில் அதிகாலையிலேயே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பக்தர்கள் அதிகாலை முதல் விநாயகர் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் அதிகாலையிலேயே அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல, புகழ்பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் காலையில் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார கோலத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட நிலையில், பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.