சென்னை ; டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்து வருகின்றன. இதனை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்களே கேள்வி எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் ரூ.10 வசூலிக்கும் வீடியோக்களில் வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்மூலம், டாஸ்மாக் விவகாரம் தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது என்று அனைத்து மாவட்ட மேலாளர்களுடன் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :- நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது. கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்தால் அபராதம் விதிக்க வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதல் விற்பனை விலைப் பட்டியல் வைக்க வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகளும் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். மதுபான கடைகளை தவிர மற்ற இடங்களில் மதுபானங்கள் விற்கப்படும் இடங்களை கண்டறிந்து, காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும், எனக் கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.