டாஸ்மாக் மது விற்பனையால் திமுக பிரமுகர்களின் சாராய ஆலைகளுக்கு அதிக வருவாய் : அண்ணாமலை குற்றச்சாட்டு!!

தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை ராமநாதபுரத்தில் என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த 3 நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை இன்று சிவகங்கை வந்தார். அதன்படி, அண்ணாமலையின் சிவகங்கை பேருந்து நிலையம் முன்பாக இன்று திறந்த வேனில் நின்றபடி அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“என் மண் என் மக்கள்” யாத்திரையில் நடந்து வந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிக்கு இன்னும் எல்லா வசதி வாய்புகளும் கொடுக்கப்படுகிறது. ஊதியம் வருகிறது. அல்லவன்ஸ் கிடைக்கிறது. அமைச்சருக்கான சம்பளம் எதற்கு கிடைக்கிறது என்றால் மக்கள் பணி செய்வதற்கான ஊதியம். அரசியலில் முழு நேரமாக வேலை பார்க்கிறார்கள் என்பதற்காகத்தான் அமைச்சர்களுக்கு சம்பளம்.

ஆனால் எந்த வேலையும் பார்க்காமல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு மாதா மாதம் நான் சம்பளம் கொடுத்து துறை இல்லாமல் அமைச்சராக வைத்திருப்பேன் என்று ஸ்டாலின் சொல்கிறார் என்றால் எந்த அளவுக்கு ஊழலுக்கு திமுகவின் முதல் குடும்பம் உள்ளது என்று தெரிகிறது. தமிழகத்தில் நடக்கும் ஊழல் ஆட்சி நம்மை சுரண்டிக் கொண்டு இருக்கிறது. இப்படியே இன்னும் 2, 3 வருடங்கள் போனால் நம்மிடம் இருக்கும் உடை மட்டும் தான் மிஞ்சுமே தவிர வேறு எதுவும் மிஞ்சாது.

நம்பர் 1 மாநிலமாக மாற்றுகிறேன் என்று சொல்லிவிட்டு முதல்வர் ஸ்டாலின் வந்தார். உண்மையாகவே நம்பர் மாநிலமாக எதில் மாற்றியிருக்கிறார் என்றால் இந்தியாவிலே கடன் வாங்கியதில் முதல் மாநிலம் தமிழகம். 3-வது இருந்தோம். போன வருஷம் 2-வது வந்தோம்.. இந்த ஆண்டு ஜூலையில் முதலிடத்திற்கு வந்துவிட்டோம். ஒவ்வொருவர் தலைமீதும் 3 லட்சத்து 52 ஆயிரம் கடன் உள்ளது. மக்கள் பெயரை சொல்லி கடனை வாங்கி அவர்கள் செல்வம் கொழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த மாடலின் பெயர்தான் திராவிட மாடல்.

பாஜகவிற்கும் திமுகவிற்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் உள்ளது. ஒரே வரியில் சொல்வது என்றால் பாஜகவுக்கு என் மண் என் மக்கள் என்பதுதான்.. இதே திமுக இந்த யாத்திரையை நடத்தியிருந்தால் “என் மகன் என் பேரன்” என்று பெயர் வைத்திருக்கும். ஒன்பது ஆண்டாக மோடி எந்தவித ஊழலுக்கும் இடம் கொடுக்காமல் ஆட்சி நடத்தி வருகிறார். நாட்டை பிரதானமாக வைத்து அல்லும் பகலும் பிரதமர் மோடி வேலை செய்து கொண்டு இருக்கிறார். அதனால்தான், பொருளாதார வளர்ச்சியில் ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா வந்துள்ளது என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

23 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

23 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.