டாஸ்மாக் மது விற்பனையால் திமுக பிரமுகர்களின் சாராய ஆலைகளுக்கு அதிக வருவாய் : அண்ணாமலை குற்றச்சாட்டு!!

தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை ராமநாதபுரத்தில் என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த 3 நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை இன்று சிவகங்கை வந்தார். அதன்படி, அண்ணாமலையின் சிவகங்கை பேருந்து நிலையம் முன்பாக இன்று திறந்த வேனில் நின்றபடி அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“என் மண் என் மக்கள்” யாத்திரையில் நடந்து வந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிக்கு இன்னும் எல்லா வசதி வாய்புகளும் கொடுக்கப்படுகிறது. ஊதியம் வருகிறது. அல்லவன்ஸ் கிடைக்கிறது. அமைச்சருக்கான சம்பளம் எதற்கு கிடைக்கிறது என்றால் மக்கள் பணி செய்வதற்கான ஊதியம். அரசியலில் முழு நேரமாக வேலை பார்க்கிறார்கள் என்பதற்காகத்தான் அமைச்சர்களுக்கு சம்பளம்.

ஆனால் எந்த வேலையும் பார்க்காமல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு மாதா மாதம் நான் சம்பளம் கொடுத்து துறை இல்லாமல் அமைச்சராக வைத்திருப்பேன் என்று ஸ்டாலின் சொல்கிறார் என்றால் எந்த அளவுக்கு ஊழலுக்கு திமுகவின் முதல் குடும்பம் உள்ளது என்று தெரிகிறது. தமிழகத்தில் நடக்கும் ஊழல் ஆட்சி நம்மை சுரண்டிக் கொண்டு இருக்கிறது. இப்படியே இன்னும் 2, 3 வருடங்கள் போனால் நம்மிடம் இருக்கும் உடை மட்டும் தான் மிஞ்சுமே தவிர வேறு எதுவும் மிஞ்சாது.

நம்பர் 1 மாநிலமாக மாற்றுகிறேன் என்று சொல்லிவிட்டு முதல்வர் ஸ்டாலின் வந்தார். உண்மையாகவே நம்பர் மாநிலமாக எதில் மாற்றியிருக்கிறார் என்றால் இந்தியாவிலே கடன் வாங்கியதில் முதல் மாநிலம் தமிழகம். 3-வது இருந்தோம். போன வருஷம் 2-வது வந்தோம்.. இந்த ஆண்டு ஜூலையில் முதலிடத்திற்கு வந்துவிட்டோம். ஒவ்வொருவர் தலைமீதும் 3 லட்சத்து 52 ஆயிரம் கடன் உள்ளது. மக்கள் பெயரை சொல்லி கடனை வாங்கி அவர்கள் செல்வம் கொழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த மாடலின் பெயர்தான் திராவிட மாடல்.

பாஜகவிற்கும் திமுகவிற்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் உள்ளது. ஒரே வரியில் சொல்வது என்றால் பாஜகவுக்கு என் மண் என் மக்கள் என்பதுதான்.. இதே திமுக இந்த யாத்திரையை நடத்தியிருந்தால் “என் மகன் என் பேரன்” என்று பெயர் வைத்திருக்கும். ஒன்பது ஆண்டாக மோடி எந்தவித ஊழலுக்கும் இடம் கொடுக்காமல் ஆட்சி நடத்தி வருகிறார். நாட்டை பிரதானமாக வைத்து அல்லும் பகலும் பிரதமர் மோடி வேலை செய்து கொண்டு இருக்கிறார். அதனால்தான், பொருளாதார வளர்ச்சியில் ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா வந்துள்ளது என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.