திருச்சி : நான் இரவல் ஆளுனராக பணியாற்றவில்லை என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் என்ஐடியில் நடைபெறும் மகளிர் தின விழாவில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமான மூலம் திருச்சி வந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- 13 ஆண்டுகள் கழித்து புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கப்பட்டிருப்பது மிகவும் பெருமையான விஷயம். இதற்காக முதலமைச்சர், நான், நிதித்துறை இணைந்து செயல்பட்டோம். புதுச்சேரி முன்னேறி வருவதற்கு முழு பட்ஜெட் ஒரு நல்ல உதாரணம். இதை அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும்.
புதுச்சேரி ஆளுநர் மீது எந்த விமர்சனமும் வராது. தெலுங்கானா ஆளுநர் மீது வேண்டுமானால் விமர்சனம் வந்திருக்கலாம். புதுச்சேரியின் இரவல் ஆளுனர் தான் புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். நான் இரவல் ஆளுனராக பணியாற்றவில்லை. இரக்கமுள்ள ஆளுநராக பணியாற்றுகிறேன்.
பட்ஜெட் உரையை ஒரு மணி நேரம் முழுவதுமாக படித்ததை தி.மு.க உறுப்பினர்களே பாராட்டினார்கள். அந்த அந்த மாநில பிரச்சனைகளை அந்த அந்த மாநிலத்தவர் பார்த்துக் கொள்ளட்டும். மற்ற மாநில விவகாரங்கள் குறித்து நான் கருத்து கூற முடியாது. தமிழ்நாட்டிற்குள் நான் வருவதை யாரும் தடுக்க முடியாது. தமிழ்நாட்டிற்குள் தமிழிசை வந்து தான் இருப்பேன், எனக் கூறினார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.