கிரேன் கம்பி அறுந்து விழுந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கர்னூல் மாவட்டத்தில் ரெகுமானா கடா பகுதியில் பாலமுரு – ரங்காரெட்டி இடையே பாசன திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. சுமார் 100 அடி ஆழமுள்ள சுரங்கப்பாதையில் கேபிள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக இராட்சச கிரேன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வழக்கம் போல, நேற்றிரவு கேபிள் பதிக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது, யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீரென கிரேன் கம்பி அறுந்து விழுந்தது. இதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கொல்லப்பூர் போலீஸ், விபத்து குறித்து ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்டவர்கள் 100 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டு, உஸ்மானியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.