தஞ்சை அருகே திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் காலில், மேயர் அங்கியை அணிந்திருந்த தஞ்சை மேயர் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த 26ம் தேதி கும்பகோணம் வந்தார் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின்.பின்னர், கும்பகோணத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கி கவுரவப்படுத்தினார்.
தொடர்ந்து, அங்கு நடைபெற்ற அறிவாலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை முடித்து கொண்டு தஞ்சைக்கு புறப்பட்டு சென்றார். தஞ்சையில் உள்ள அறிவாலயத்தில் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் திருவுருப்படத்திற்கு மரியாதை செய்து விட்டு, திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினர்.
பின்னர், தஞ்சாவூர் மாநகராட்சியில் நவீன தூய்மைப்படுத்தும் வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற உதயநிதி ஸ்டாலினுக்கு, தாரை தப்பட்டத்துடன் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, மேயர் அங்கி அணிந்திருந்த ராமநாதன், யாரும் எதிர்பார்க்காத வகையில், சட்டென்று உதயநிதி ஸ்டாலினின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். இது அங்கு கூடியிருந்தவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. மேயர் காலில் விழும் காட்சிகள் சமூக வளைதலங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
ஏற்கனவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தொண்டர்கள் காலில் விழுவதை ஒருபோதும் தான் விரும்பவில்லை என்றும், மீறி காலில் விழுந்து வணங்கி, தன்னை மனதளவில் பெரும் நெருக்கடிக்கு ஆளாக்குவதாகவும், அப்போதைய திமுக செயல்தலைவராக இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
இப்படியிருக்கையில், உதயநிதி ஸ்டாலினின் காலில், மேயர் ஒருவர் விழுந்த சம்பவம் பெரும் விமர்சனத்திற்குள்ளாக்கியுள்ளது.
சுயமரியாதை வழியில் தன்மானம் காக்கும் இயக்கம் என்று கூறிக் கொள்ளும் திமுகவினர், உதயநிதியின் காலில் மேயர் விழுந்ததற்கு என்ன விளக்கம் தரப்போகிறார்கள் என்று எதிர்கட்சியினர் கேள்விகளை தொடுத்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.