கப்பு போனது நிம்மதி.. பிரதமரின் விளம்பரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸி., கேப்டனுக்கு நன்றி : திமுக பிரமுகர் சர்ச்சை!!
கடந்த அக்டோபர் மாதம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று இறுதிப்போட்டியுடன் முடிந்து உள்ளது. உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் விளையாடிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை ஆஸ்திரேலியா தேர்வு செய்தார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட், லபுஷேனின் அபார ஆட்டத்தால் 43வது ஓவரில் இலக்கை கடந்து வெற்றிபெற்றது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 6 வது முறையாக உலகக்கோப்பை வென்று சாதித்து இருக்கிறது.
உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என நம்பிக்கையில் இருந்த வீரர்கள், ரசிகர்கள் வேதனையில் கண்ணீர் வடித்தனர். விராட் கோலி, ரோகித் ஷர்மா, முஹம்மது சிராஜ் என அனைத்து இந்திய வீரர்களும் கண்ணீர் வடித்து சோகத்துடனே மைதானத்தை விட்டு வெளியேறினர். இந்திய அணியின் தோல்வி குறித்து பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, “இந்திய வீரர்கள் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடினார்கள் அதிலும் ரோகித்,கோலி, ஷமி என.. தன் தனித் திறமைகளால் மிளிர்ந்தனர் மிக திறமையான அணி இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தது வருத்தமாக உள்ளது! ஆனால் ஒரு பக்கம் வேறு உணர்வும் வருகிறது! உலக கோப்பையை இந்தியா வென்று இருந்தால் மோடியின் விளம்பர அரசியலால் உறுதியாக கோப்பை உத்திரபிரதேசம் ராமர் கோவிலுக்கு போயிருக்கும், பாஜகாவின் அரசியல் பிரச்சார மேடைக்கும் வந்து வெற்றிக்கு காரணம் மோடியும், மோடியின் சொந்த ஊரான அஹமதாபாத்தும் தான் என சொல்லி வீரர்களின் திறமை புறம்தள்ளபட்டு மோடியின் வித்தை புகழப்பட்டு இருக்கும்! மோடியின் விளம்பர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியாவின் ஹெட்க்கும் நன்றி சொல்ல வேண்டும் என்றும் தோனுகிறது. உலகக்கோப்பை போய்விட்டது என்று வருத்தப்படுவதை விட கோப்பையோடயாவது போனதே என நிம்மதி தான் கொள்ள முடிகிறது இந்த நேரத்தில்!!!” என்றார்.
கிரிக்கெட்டிலும் திமுக பிரமுகர் அரசியல் செய்வதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.