தூத்துக்குடி தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியபோது, பிரதமர் மோடியை கடுமையாக தாக்கினார். பிரதமர் மோடி சேலத்தில் பேசியதை மேற்கோள் காட்டி பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், நீங்கள் எல்லாம் டெல்லியில் காமராஜரை கொல்ல நினைத்த பாவிகள் என்றார்.
அப்போது அவர் பயன்படுத்திய ஒரு வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய வீடியோ கிளிப்பையும் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:- பிரதமருக்கு எதிராக இழிவான மன்னிக்க முடியாத வார்த்தையை பேசியதன் மூலம் தி.மு.க. தலைவர்கள் தரம்தாழ்ந்த நிலையை அடைந்துள்ளனர். எங்களை விமர்சனம் செய்வதற்கு எதுவுமே இல்லாத நிலையில், இந்த நிலைக்கு சென்றுள்ளனர்.
அப்போது மேடையில் இருந்த தி.மு.க. எம்.பி. கனிமொழிகூட, அமைச்சரை தடுக்கவில்லை. இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக டி.ஜி.பி. ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று, தி.மு.க. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு எதிராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மிகவும் இழிவான முறையில் பேசியிருப்பதாகவும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. துணை தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தி உள்ளார். அவரை கைது செய்து செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது வேட்பாளர் கனிமொழியும் உடனிருந்ததால், அவர் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாராயணன் திருப்பதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.