ஆட்சியாளர் தவறை தட்டிக் கேட்கும் துணிச்சல் தொடர வேண்டும்.. புத்தாண்டு வாழ்த்தில் ஆளுங்கட்சிக்கு குடைச்சலை கொடுத்த அண்ணாமலை!

ஆட்சியாளர் தவறை தட்டிக் கேட்கும் துணிச்சல் தொடர வேண்டும்.. புத்தாண்டு வாழ்த்தில் ஆளுங்கட்சிக்கு குடைச்சலை கொடுத்த அண்ணாமலை!

அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சென்னை மற்றும்‌ தென்‌ மாவட்டங்களில்‌, கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்‌ பாதிப்புகளிலிருந்து, கொஞ்சம்‌ கொஞ்சமாக மீண்டெழுந்து வருகிறோம்‌. தமிழகம்‌ முழுவதிலிருந்துமே, பாதிக்கப்பட்ட மக்கள்‌ துயர்‌ துடைக்க, ஜாதி, மதப்‌ பாகுபாடுகள்‌ இல்லாமல்‌ ஆதரவுக்‌ கரங்கள்‌ நீண்டன.

நம்‌ மக்களின்‌ இந்த இயல்பான சமத்துவமும்‌, சகோதரத்துவமும்‌ எப்போதும்‌ நிலைத்திருக்க வேண்டும்‌ பல ஆயிரம்‌ கோடிகள்‌ நம்‌ வரிப்பணத்தைச்‌ செலவு செய்தும்‌, எந்தத்‌ தவறுமே செய்யாமல்‌ ஒவ்வொரு முறையும்‌ மழை வெள்ளத்தால்‌ நாம்‌ பாதிக்கப்படுவது தொடர்ந்து கொண்டிருப்பது ஏன்‌ என்ற கேள்வி, முதன்முறையாக மக்கள்‌ மத்தியில்‌ எழுந்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஆட்சியாளர்களின்‌ தவறுகளைத்‌ தட்டிக்‌ கேட்கும்‌ துணிச்சல்‌ தொடர வேண்டும்‌. பல ஆண்டுகளாக, மக்கள்‌ வரிப்பணத்தை வெளிப்படையாக ஊழல்‌ மூலம்‌ கொள்ளையடித்தாலும்‌, சட்டத்தின்‌ பிடியிலிருந்து தப்பித்து வந்தவர்கள்‌, நீண்ட காலம்‌ தப்பிக்க முடியாது என்ற நம்பிக்கையை, நமது நீதித்துறை இந்த ஆண்டு உறுதிப்படுத்தி இருக்கிறது.

மக்கள்‌ பணத்தைக்‌ கையாடல்‌ செய்தவர்கள்‌ அனைவருக்குமே நடுக்கம்‌ ஏற்பட்டிருக்கிறது. இனியொரு முறை ஊழல்‌ செய்யும்‌ முன்பு, இதற்கான தண்டனை நிச்சயம்‌ என்ற எண்ணம்‌, ஊழல்வாதிகள்‌ மத்தியில்‌ உருவாகியிருப்பது மகிழ்ச்சி. மக்கள்‌ வரிப்பணம்‌ இனி மக்களுக்கே பயன்பட வேண்டும்‌.

மத்தியில்‌ நேர்மையான, ஊழலற்ற, மக்கள்‌ நலன்‌ சார்ந்த மாண்புமிகு பாரதப்‌ பிரதமர்‌ நரேந்திர மோடி அவர்களின்‌ நல்லாட்சி, பாரத மக்களின்‌ பேராதரவுடன்‌, மூன்றாவது முறையாக வரும்‌ 2024 ஆம்‌ ஆண்டில்‌ தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி. கடந்த பத்து ஆண்டுகளாக, விவசாயிகள்‌, மீனவர்கள்‌, மகளிர்‌, இளைஞர்கள்‌, மாணவர்கள்‌ என கோடிக்கணக்கான பொதுமக்கள்‌ பலனடைந்துள்ள மத்திய அரசின்‌ நலத்திட்டங்கள்‌ வரும்‌ ஆண்டுகளிலும்‌ தொடரும்‌.

வரும்‌ 2024 புத்தாண்டு, தமிழகத்திலும்‌, நேர்மையான, பொதுமக்களுக்கான மக்கள்‌ பிரதிநிதிகளைத்‌ தேர்ந்தெடுக்கும்‌ அரசியல்‌ மாற்றத்திற்கான நல்லாண்டாக உருவாகும்‌ என்ற நம்பிக்கை இருக்கிறது. அனைவருக்கும்‌, ஆரோக்கியமான, மகிழ்ச்சி பொங்கும்‌ நலம்‌ நிறைந்த புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள்‌.” எனத் தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ராமாபுரம் மெட்ரோ விபத்து; கோடி ரூபாய் அபராதம்; அதிரடி காட்டிய நிர்வாகம்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…

4 minutes ago

கமல்ஹாசனுக்கு பணிந்த கர்நாடக அரசு? தக் லைஃப்க்கு பச்சை கொடி!

“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…

1 hour ago

கொல்கத்தாவில் தமிழருக்கு கத்திக்குத்து- வெளியான சிசிடிவி வீடியோவால் அதிர்ச்சி

திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…

3 hours ago

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

17 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

18 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

19 hours ago

This website uses cookies.