மத்திய பிரதேசத்தின் மொரீனா மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு இரு வீட்டாரும் நேற்று மாலை தயாராகி கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், மணமகள் தனது குடும்பத்தினரிடம், பியூட்டி பார்லருக்கு சென்று வருகிறேன் என கூறி விட்டு சென்றுள்ளார்.
அவருக்காக, மணமகன், மற்ற விருந்தினர்கள், உறவினர்கள் என பலரும் மணிக்கணக்காக காத்திருந்து உள்ளனர். நேரம் செல்ல, செல்ல மணமகனின் குடும்பத்தினர் பொறுமை இழந்து விட்டனர். மணமகளும் திரும்பி வரவில்லை.
இதனால், மணமகனின் சகோதரர் சென்று மணமகள் வீட்டாரிடம் இதுபற்றி கேட்டு உள்ளார். அதற்கு அழகுப்படுத்தி கொள்வதற்காக பார்லருக்கு சென்று உள்ளார். எந்த நேரத்திலும் மணமகள் திரும்பி விடுவார் என கூறியுள்ளனர்.
ஆனால், மணமகள் திருமணத்திற்கு முன்பே தனது காதலருடன் தப்பி விட்டார். இதனால், திருமண நிகழ்ச்சி களையிழந்தது.
ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார், கொத்வாலி காவல் நிலையத்திற்கு சென்று, மணமகளை காணவில்லை என புகார் அளித்து உள்ளனர். போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.