வழக்கை ஒத்திவைக்க முடியாது : முதல்ல அவரை நேரில் வரச் சொல்லுங்க… அண்ணாமலைக்கு நீதிபதி போட்ட உத்தரவு!
சேலத்தை சேர்ந்தவர் பியூஸ் மானூஷ். இவர், சேலம் கோர்ட்டில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்க கூடாது என கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு குறித்து இருமதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை கருத்து தெரிவித்ததாக கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சேலம் 4-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு, கோர்ட்டில் அண்ணாமலை ஆஜராக உத்தரவிட்டார். இதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை தடை வாங்கியதுடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் மனுதாக்கல் செய்தார். இதை எதிர்த்து பியூஸ் மானூஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அண்ணாமலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனிடையே, இந்த வழக்கு சேலம் 4-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பா.ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோர்ட்டில் ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால் அவரது சார்பில் வக்கீல் கோர்ட்டில் ஆஜரானார்.
வழக்கை 3 மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என அவர் நீதித்துறை நடுவரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் தமிழ்நாடு முழுவதும் அண்ணாமலை நடைபயணம் செய்கிறார்.
அவரை நீதிமன்றத்திற்கு வரச்சொல்லுங்கள் என மாஜிஸ்திரேட்டு கூறினார். இதையடுத்து வழக்கை அடுத்தமாதம் (மார்ச் ) 2-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்று அண்ணாமலை ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.