மனு அளிக்க வந்த பொதுமக்களை வெளியே போ என கடிந்த ஆட்சியர் : வீட்டு விஷேத்திற்கு வரவில்லை என திருப்பி பேசிய மக்கள்.. மீண்டும் சர்ச்சையில் ஆட்சியர்!!

கரூர் : போராட்டத்தில் என்ன பெருமை இருக்கு ? கடிந்து விழுந்து வெளியோ போங்கள் என்று கத்திய கரூர் கலெக்டர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் டாஸ்மாக் கடை புதிதாக கடந்த மாதம் 26ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கடைக்கு அருகில் அரசுப் பள்ளி, சர்ச் மற்றும் குடியிருப்புகள் மிகுந்த பகுதியாகும்.

குடிமகன்கள் மது அருந்தி விட்டு சாலைகளில் பாட்டிகள்களை உடைப்பது, கடந்து செல்லும் பெண்கள், மாணவிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டுவது போன்ற நடவடிக்கைகளில் மதுப்பிரியர்கள் ஈடுபடுகிறார்கள் என குற்றம் சாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் டாஸ்மாக் துறையினையும், மதுவிலக்குத்துறை அமைச்சரின் தொகுதியான கரூர் தொகுதியிலேயே, சர்வதேச போதை ஒழிப்பு தினத்தின் அன்று புதிய டாஸ்மாக் கடை திறந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கடந்த வாரம் மனு கொடுத்தும் பயனில்லை.

இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடையை முழுவதுமாக மூட வலியுறுத்தி நெரூர் என்.எஸ்.கே நகர், ஆர்.சி.தெரு, எம்.ஜி.ஆர் நகர் சுற்றியுள்ள பகுதிகளை சார்ந்த கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வருகை தந்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுச் சுவர் நுழைவு வாயிலிருந்து கோஷம் எழுப்பியவாறு வந்த பொதுமக்களை நோக்கி வேகமாக சென்ற கரூர் கலெக்டர் பிரபுசங்கர், எதற்காக இங்கே கோஷம் போடுகின்றீர்கள், இதில் என்ன உங்களுக்கு பெருமை இருக்கின்றது என்றும், முதலில் வெளியே போங்கள் என்றும் மனுக்கள் கொடுக்க வந்த மக்களிடம் கடுமையாக நடந்து கொண்டார்.

அப்போது வழக்கறிஞர் நன்மாறன், நாங்கள் ஒன்னும் கலெக்டர் சார் விஷேசத்திற்கு வரவில்லை, மனுக்கள் கொடுக்க வந்துள்ளோம், எதற்காக, வெளியோ போங்கள், வெளியே போ என்று சொல்கின்றார் என கேட்டு வழக்கறிஞர் நன்மாறன் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நின்றதால் பெரும் பரபரப்பு நிலவியது.

பின்னர் காவல்துறையினர் சமாதானபடுத்தி, அமைதியாக கோஷங்கள் எழுப்பாத வகையில் கூட்டமாக செல்லாதீர்கள் என்றும் ஒரு சிலர் மட்டும் செல்லுங்கள் என்றும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டதன் பின்னர் மனுக்களாக அந்த மக்கள் கொடுத்துள்ளனர்.

மேலும், அங்கு காவலில் இருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் (SI) நாகராஜன் என்பவரை எதற்கு கோஷம் போட்டப்படி அனுமதித்தீர்கள் என்று எச்சரித்துள்ளார். விருதுகள் மேல், விருதுகள் வாங்கி கரூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் கலெக்டர், இவர் கரூர் கலெக்டராக சேர்ந்த நாள் முதல் காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP) ஒருவரை ஒருமையில் பேசியுள்ளார்.

அதன் பின்னர் கொரோனா பிடியில் இருந்த போது, ஆசிரியர் சமூகத்தினரை கடுமையாக விமர்சித்தார். அதே நிலையில், அன்றே, டிவிட்டரில் கடுமையான வார்த்தைகள் கையாள மாட்டேன் என்றும் மன்னிப்பு கேட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் குளித்தலை தொகுதியில், நங்கவரம் பகுதியில் இருந்து மனுக்கள் கொடுக்க வந்த வயதான ஒருவரை வெளியே போயா ? என்றும் கூறிய சொற்கள் வைரலானதையடுத்து இன்றும், அதே கரூர் கலெக்டர் போராட்டம் என்றால் பெருமையா ? என்றும். முதலில் வெளியே போங்க, என்று மனுக்கள் கொடுக்க வந்த மக்களை விரட்டியடித்த சம்பவமும் பெரும் பரப்பரப்பினையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

8 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

9 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

10 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

10 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

11 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

11 hours ago

This website uses cookies.