லட்டு மற்றும் நெய்வேத்திய பிரசாதங்கள் ஆகியவற்றை தயார் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் பலநூறு கோடி ரூபாய்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டெண்டர் மூலம் நெய் கொள்முதல் செய்கிறது.
தேவஸ்தானத்திற்கு நெய் சப்ளை செய்ய ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்கள் தரம், மனம்,சுவை ஆகியவற்றுடன் கூடிய நெய்யை மட்டுமே சப்ளை செய்ய வேண்டும் என்பது நிபந்தனை.
கடந்த காலங்களில் நெய் சப்ளை செய்ய ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனங்கள் தரம், மனம்,சுவை ஆகியவற்றில் குறைபாடுகள் உள்ள நெய்யை சப்ளை செய்ததாக குற்றச்சாட்டுகள் ஏற்பட்டன.
இதனால் திருப்பதி மலையில் தயார் செய்யப்படும் லட்டு உள்ளிட்ட மற்ற பிரசாதங்களிலும் தரக்குறைவு ஏற்பட்டது.
இது பற்றி பல்வேறு புகார்கள் வந்த நிலையில் தேவஸ்தான நிர்வாகம் தரமான நெய்யை கொள்முதல் செய்ய நான்கு பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்த நிலையில் தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்யப்பட்ட நெய்யை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி சோதனை செய்து பார்த்தபோது அவற்றில் தமிழ்நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று சப்ளை செய்த நெய்யில் தாவர கொழுப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே அந்த நிறுவனத்தை தேவஸ்தானம் கருப்பு பட்டியலில் வைத்துள்ளது. இது பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக சர்வதேச தரத்துடன் கூடிய ஆய்வுக்கூடம் ஒன்றை திருப்பதி மலையில் நிறுவ ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதன் மூலம் திருப்பதி மலைக்கு வரும் நிலையை அவ்வப்போது சோதனை செய்து அதன் தரத்தை உறுதி செய்ய முடியும்.
தமிழ்நாட்டை சேர்ந்த பால் பொருள் உற்பத்தி நிறுவனம் ஒன்று தொடர்ந்து நெய் சப்ளை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நிறுவனத்தை நாங்கள் கருப்பு பட்டியலில் வைத்திருக்கிறோம்.
எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க நெய் கொள்முதல் செய்வதற்கு தேவையான வழிமுறைகளை ஏற்படுத்த நாங்கள் அமைத்துள்ள நிபுணர் குழு ஆலோசனைகளை வழங்கும்.
அந்த ஆலோசனைகளின் அடிப்படையில் இனிமேல் நெய் கொள்முதல் நடைபெறும் என்று தெரிவித்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.