டெண்டர் எடுக்க வந்த ஒப்பந்ததாரர்கள்.. செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரை அடிக்க பாய்ந்த திமுகவினர் : ரகளை செய்த வீடியோ வைரல்!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி சார்பில் சமயபுரம் வரக்கூடிய வாகனங்களுக்கு வரி வசூல் செய்யப்படுகிறது. சமயபுரம் பகுதிக்கு வரக்கூடிய 7 வழிகளிலும் டெண்டர் எடுத்தவர்கள் தங்களது ஆட்களை நியமித்து வரிவசூல் செய்து வருகின்றனர். அந்த வகையில் மூன்றாண்டுக்கு ஒருமுறை ஒப்பந்த அடிப்படையில் டெண்டர் மூலம் வாகனங்களுக்கு வரி வசூல் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்ததாரர் ஸ்ரீரெங்கராஜ் என்பவர் வரிவசூலுக்காண டெண்டர் அளித்து அனுமதி பெற்றார். இதன் மூலம் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சிக்கு ஆண்டொன்றுக்கு ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் பணம் கட்டி வந்தார்.

3 வருட டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்ததாரருக்கான டெண்டர் நேற்று நடைபெற்றது. ஒப்பந்தப்புள்ளி காண டெண்டர் திறப்பு, இன்று காலை கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரக்குமார் முன்னிலையில், பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

டெண்டர் திறப்பு நேரத்தில் ஒப்பந்ததாரர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லாத நிலையில், ஒப்பந்தத்திற்கு சம்பந்தமில்லாத, சமயபுரம் திமுக நகர செயலாளர் துரை ராஜசேகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த டெண்டர் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

அப்போது, சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி சார்பில் வாகன வரி வசூல் ஒப்பந்த புள்ளி டெண்டர் மாலை 3.30 மணி வரை நடைபெற்றதாகவும், ஒப்பந்ததாரர்கள் சிலர் இல்லாத நிலையில், பெட்டியினை சீல் வைத்து மூடாமல் வெறும் பூட்டு போட்டு பூட்டியுள்ளதால் முறைகேடு நடந்துள்ளது எனக் கூறி சத்யநாராயணன் என்ற ஒப்பந்ததாரர் புகார் தெரிவித்தார்.

இதனால் அங்கிருந்த திமுகவினர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்க முற்பட்டனர். இந்த சம்பவங்களை வீடியோ எடுத்த செய்தியாளர்களை, அங்கிருந்த, சமயபுரம் திமுக நகர செயலாளர் துரை ராஜசேகர் மற்றும் அவரது ஆதரவாளர் ஆட்டோ ஓட்டுநர் மாணிக்கம் ஆகியோர், செய்தியாளர்களை செய்தி சேகரிக்கவிடாமல், வீடியோ எடுக்க கூடாதென மிரட்டி, வெளியேறுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

டெண்டரில் நடந்துள்ள முறைகேடுகளை கண்டறிய பேரூராட்சி அலுவலகத்தில் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தால், பாரபட்சமாக செயல்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரக்குமாரின் நடவடிக்கைகள் தெரிய வரும் எனவும், செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை தடுத்து அவர்களை தாக்க வந்த திமுக நிர்வாகிகள் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒப்பந்ததாரர்களுடன், திமுகவினரால் ஏற்பட்ட வாக்குவாதம், சலசலப்பு காரணமாக டெண்டர் ஒத்திவைக்கப்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

7 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

8 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

8 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

9 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

10 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

10 hours ago

This website uses cookies.