கலைஞரோட வசனம்.. தப்பு செய்துவிட்டேன் : குற்ற உணர்ச்சியாவே இருக்கு.. முரசொலியில் ரஜினி உருக்கம்!!!

கலைஞரோட வசனம்.. தப்பு செய்துவிட்டேன் : குற்ற உணர்ச்சியாவே இருக்கு.. முரசொலியில் ரஜினி உருக்கம்!!!

கலைஞர் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி கலைஞரின் அரசியல், இலக்கியம், எழுத்து, திரைப்பயணம் , வசனம் என பல்வேறு துறைகளில் அவருடைய பங்களிப்பு குறித்து பிரபலங்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திரைத்துறை உலகத்தின் பார்வையில் கலைஞர் என்ற தலைப்பில் முரசொலி நாளிதழில் நடிகர் ரஜினிகாந்தின் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் ரஜினி தனக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குமான பழக்கம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் முரசொலியில் கூறியிருப்பதாவது: தமிழ் திரையுலகின் இரண்டு ஜாம்பவான்களான சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜிஆர் ஆகிய இருவரும் புகழின் உச்சிக்கு செல்ல முக்கிய காரணமாக இருந்தவர் கலைஞர். 1980 ஆம் ஆண்டு நான் ஒப்பந்தமாகியிருந்த திரைப்படத்தில் கலைஞர் வசனம் எழுத ஒப்புக் கொண்டார்.

அப்போது எளிமையான தமிழை பேசவே சிரமப்படும் போது உங்களின் வசனங்களை நான் எப்படி பேசுவது என அவரிடமே சொன்னேன். இருப்பினும் அவர் வசனங்களை பேசி நடித்திருக்கலாமோ, தவறு செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி இன்றும் எனக்குள் இருக்கிறது.

எம்ஜிஆரை கட்சியிலிருந்து நீக்கும் முடிவை நிச்சயம் பல பேரின் ஆலோசனைகளை கேட்டே கலைஞர் முடிவெடுத்திருப்பார். எதையும் தாங்கும் இதயம் என்ற அண்ணா கலைஞரை நினைத்துதான் சொன்னாரோ?

வேதனைகள், சங்கடங்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள் என அத்தனையும் தாண்டி 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை என்றாலும் கட்டுக்கோப்பாக ஒரு தனி ஆளாக கட்சியை வழிநடத்தி மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்தார் என்றால் அது ஒரு மாபெரும் புரட்சி.

1977 ஆம் ஆண்டு நான் சென்று கொண்டிருந்த போது எனக்கு பின்னால் ஒரு கார் வந்தது. அதில் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு கலைஞர் உட்கார்ந்திருந்தார். உடனே நான் வழிவிட்டேன். அப்போது அவரது கார் என்னை தாண்டி போகும் போது ஒரு சிரிப்பு சிரித்தார். அதை நான் இன்றும் மறக்கவில்லை. அதுதான் நான் கலைஞரை முதலில் சந்தித்தது. இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

13 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

14 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

14 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

15 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

15 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

16 hours ago

This website uses cookies.