தன் மீது தொடரப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி உள்துறை அமைச்சர் அனிதாவை சந்தித்த மும்பை நடிகை ஜெத்வானி குடும்பத்தினர்
வழக்கு முடியும் வரை விஜயவாடாவில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மும்பை நடிகை மனு
ஆந்திர மாநிலம் அமராவதி தலைமைச் செயலகத்தில் உள்ள உள்துறை அமைச்சரின் அலுவலகத்தில் தனது பெற்றோர் வழக்கறிஞருடன் மும்பை நடிகை காதம்பரி ஜேத்வானி உள்துறை அமைச்சர் அனிதாவை சந்தித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் உனது வழக்கில் ஏற்கனவே மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நினைவூட்டினார். அதற்காக அரசு மற்றும் உள்துறை அமைச்சருக்கு மும்பை நடிகை ஜேத்வானி நன்றி தெரிவித்து கொண்டார்.
மேலும் தன் மீது குக்கலா வித்யாசாகர் தொடர்ந்த சட்டவிரோத பொய் வழக்குகளை ரத்து வேண்டும் என்று உள்துறை அமைச்சரிடம் கேட்டு கொண்டார்.
இந்த வழக்கு முடியும் வரை விஜயவாடாவில் தங்கும் தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு ஜேத்வானி மனு அளித்தார்.
மேலும் படிக்க: அமைச்சர் தொகுதியில் சத்துணவு முட்டை தனியார் உணவகத்துக்கு விற்பனை.. சீல் வைத்த அதிகாரிகள்.. சிக்கிய இருவர்!
இதற்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர், அரசின் பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் தேவையில்லை என்றும், முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அனைவரும் துணை நிற்பார்கள் .
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் உங்கள் நிலைமை மற்றொருவருக்கு உதாரணம் என்று உள்துறை அமைச்சர் அனிதா ஜெத்வானிக்கு ஆறுதல் கூறினார்.
ஜேத்வானி வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா தெரிவித்தார்.
நடிகை ஜேத்வானியின் தந்தை உள்துறை அமைச்சரிடம், புதிய அரசு உடனுக்குடன் எடுத்த நடவடிக்கை விதம் தான் தங்களின் வலியை வெளிப்படுத்த தைரியத்தை கொடுத்ததாக தெரிவித்தார்.
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
This website uses cookies.