திமுகவினரை விட ஆளுநர் மோசமாக நடந்துகொண்டார் : டங்க் ஸ்லிப்பாகிய அண்ணாமலை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
நேற்று இந்த ஆண்டினுடைய முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால் திமுக தயாரித்த உரையை படிக்க மறுத்து, தேசிய கீதம் இசைக்கும் முன்னரே அவையில் இருந்து ஆளுநர் ஆர்என் ரவி வெளியேறினார். இது பெரும் சர்ச்சையானது.
ஆளுநரை மாண்புடன் நடத்த வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலினும் உத்தரவிட்டு இருக்கிறார். இதையடுத்து ஆளுநர் உரையை நான் வாசித்தேன். சட்டசபையில் தேசிய கீதம் ஆளுநர் உரைக்கு பின் பாடப்படும் என்பதே மரபு. அதை மாற்றும்படி ஆளுநர் ரவி கூறினார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது, என்று சபாநாயகர் அப்பாவு ஆளுநர் ஆர். என் ரவிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் சபாநாயகர் சரியாக நடந்து கொள்ளாததால் ஆளுநர் அவையில் இருந்து நேற்று வெளியேறினார் என்று கூறுவதற்கு பதிலாக “ஆளுநர்” மோசமாக நடந்து கொண்டார்.. அதனால் ஆளுநர் வெளிநடப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது சபாநாயகர் என்று சொல்வதற்கு பதிலாக டங்க் ஸ்லிப் ஆகி ஆளுநர் மீதே அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.