விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் திமுக பேராசிரியர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது,
இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசும் போது, அனைவரும் அனைத்து கிடைக்க வேண்டும் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி எனவும் “உள்ளூர் மேலத்துக்கு விளம்பரமா எதற்கு” அதை போல தான் நான் காலை முதல் இரவு வரை உங்களுக்காக பணி செய்து வருகிறேன்.
ஒவ்வொரு போராட்டத்தின் போதும் கலைஞருடன் துணை நின்று போராடினார் பேராசிரியர். அரசியலில் விலை போகாத அரசியல் தலைவர் தற்போது வாரிசு அரசியல் என பேசி வருகின்றனர்.
நாங்கள் வாரிசு அரசியல் தான் செய்கிறோம், உதயநிதி அமைச்சரானால் பாலாறும் தேனாறும் ஓடுமா என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்,ஆம் தற்போது தான் பாலாற்றில் தண்ணீர் வருகிறது, அவர் மக்கள் நலனுக்காக சேவை செய்ய உள்ளார்.
இதில் கலந்துகொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி,
பேராசிரியர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார், பேராசிரியர் போன்ற தலைவரை நாம் சந்திப்பது ஒரு அசாதாரணமான செயல் இல்லை.
நம்மை எல்லாம் 2ஜி வழக்கை வைத்து பல அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்தார்கள், ஆனால் தற்பொழுது நீதிமன்றம் 2ஜி வழக்குகை பொய் என நீதிமன்றம் உண்மை தீர்ப்பை அளித்துள்ளது.
தனக்கு எந்த இழுக்கு வந்தாலும் அதை பற்றி எப்போதும் கோபப்பட்டார், ஆனால் தமிழுக்கு தமிழ் மக்களைக்கு இழுக்கு வந்தால் அதிபடியாக கோபப்படுவார்.
பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் கவர்னரை நியமித்து, இங்கு ஆர்எஸ்எஸ் பணிகளை செய்து வருகிறார்கள்.
ஆன்லைன் ரம்மி தடை செய்ய ஆளுநரிடம் கோரிக்கை வைத்தால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க சென்னால் அவர் காலம் தாழ்த்தி வருகிறார். பல முறை சட்ட அமைச்சர் ஆளுநரை சந்தித்தும் தற்போது வரை கவர்னர் ஒப்புதல் அளிக்காதாற்க்கு என்ன காரணம்? மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய கூடாது என ஆளுநரை நியமித்துள்ளார்கள்.
இந்தி எதிர்ப்பு இன்னும் நீர்த்து போகவில்லை, சூடு சொரணை இருப்பவர்களுக்கு இந்தி எதிர்ப்பு குறையாது என பேசியவர் பேராசிரியர்.
திராவிட ஆட்சி என்ன செய்தது என கேள்வி எழுப்பி வருகிறார்கள், தமிழகம் தற்போது வளர்ந்து பாதையில் இருக்கிறது எனவும், மருத்துவம் கல்வியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது… இதுதான் திராவிட மாடல்.
நீட் மருத்துவ கல்லூரியில் நுழைவு தேர்வு வைத்து தமிழக மாணவர்களை படிக்க கூடாது என சதி திட்டம் செய்து வருகிறார்கள் பாஜகவினர்.
பெட்ரோல் விலை குறைந்தாலும் மத்திய அரசு விலையை குறைத்து தருவது இல்லை, மக்களை சாதி மதம் என பிரிக்கும் வேலையே பாஜகவினர் செய்து வருகின்றனர். விவசாயிகளுக்கும் எதிராக சட்டம் கொண்டு வந்தால் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர் தான் எதிர் கட்சிகள், அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவில்லை.
ஆனால் திராவிட ஆட்சி அடைந்தவுடன் இளைஞர் நலனில் அக்கறை கொண்டு வேலை வாய்ப்புகளை உருவாக்கியவர்கள் முதல்வர் ஸ்டாலின்.
மருத்துவமனைக்கு வர முடியாதவர்களுக்கு வீடு தேடி மருத்துவம் அளிக்க வேண்டும் என ஒரே நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது தான் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை உருவாக்கியவர் முதல்வர் ஸ்டாலின் என பேசினார்.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.