அவைக் குறிப்பில் நீக்கப்பட்டதை வீடியோவாக வெளியிட்ட ஆளுநர் : அரசியல் களத்தில் பரபரப்பு!!

அவைக் குறிப்பில் நீக்கப்பட்டதை வீடியோவாக வெளியிட்ட ஆளுநர் : அரசியல் களத்தில் பரபரப்பு!!

இந்த வருடத்தின் முதல் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையின் தொடக்கத்தில் திருக்குறளை வாசித்தார். அதன் பிறகு பட்ஜெட் கூட்டத்தினரின் அறிமுகத்தை வாசித்தார். அதன் பின் பாதியில் அதனை நிறைவு செய்து, இங்கு (சட்டப்பேரவையில்) தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று கூறி இரண்டு நிமிடத்தில் உரை நிறைவு செய்து அவையை விட்டு வெளியேறினார் ஆளுநர் ரவி .

இது குறித்து சபாநாயகர் அப்பாவு சட்டமன்றத்தில் கூறுகையில், தேசிய கீதத்தை இசைக்கவில்லை என்று ஆளுநர் ரவி குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், ஆளுநர் தங்கள் மனதில் உள்ளதை சொல்லிவிட்டார். அதேபோல், நாங்களும் எங்கள் மனதில் உள்ளதை சொல்கிறோம். இந்த அவையில் எல்லோரும் மனதில் தோன்றியதெல்லாம் பேச முடியாது. சாவக்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் குறைந்தவர்கள் இல்லை.

இவ்வளவு பெரிய வெள்ளம் புயல் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. ஒரு பைசா கூட மத்திய அரசு தரவில்லை. பல லட்சம் கோடி ரூபாய் பிரதமர் மோடி நிவாரண நிதியில் (PM Cares Fund) உள்ளது. இந்திய மக்களால் கணக்கிடப்படாத கணக்கு கேட்க முடியாத பணத்தில் இருந்தாவது ஐம்பதாயிரம் கோடி ரூபாயை ஆளுநர் வாங்கி தந்தால் நன்றாக இருக்கும். ஆளுநர் ரவியுடம் முழு உரையும் அன்றே கொடுக்கப்பட்டு விட்டது.

அவருடைய ஒப்புதல் பெற்று தான் அவைக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், அதை அவர் முழுமையாக வாசிக்கவில்லை. இங்கு ஆளுநர் மாண்புடன் நடந்துகொள்ள வேண்டும். என்பதை நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று கூறி ஆளுநர் பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அரசு அளித்த ஆளுநர் உரை தான் அவை குறிப்பில் பதிவு செய்யப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்து இருந்தார்.

இந்த முரண்பாடுகளை அடுத்து ஆளுநருக்கு ஆதரவாகவும், ஆளுநருக்கு எதிராகவும் பல்வேறு கருத்துக்களை சட்டமன்ற உறுப்பினர்கள் கூறினார்கள். இந்த நிலையில் தான் ஆளுநர் ஆர்.என்.ரவி சமூக வலைத்தளத்தில் தான் பேசிய வீடியோ என சட்டப்பேரவையில் 3 நிமிடங்கள் தான் பேசிய முழு வீடியோவையும் பதிவிட்டு உள்ளார்.

மதிப்பிற்குரிய சட்டப்பேரவை தலைவர் அவர்களே, மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே, மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர்களே அனைவருக்கும் வணக்கம். இந்த ஆண்டுக்கான சட்டமன்ற தொடக்க உரையை இந்த மகாசபையில் ஆற்றுவது எனது பெருமை. அனைவருக்கும் எனது அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் மகிழ்ச்சியும் செழிப்பும் நல்வாழ்வும் இறைவன் தர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

தொலைநோக்கு பார்வையை உள்ளடக்கிய திருவள்ளுவரின் அழியாத வார்த்தைகளை நினைவு கூர்ந்து எனது உரையை தொடங்குகிறேன். நோயில்லா வாழ்வு, அறுவடை மிகுதி, பொதுமகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பு இந்த ஐந்தும் ஒரு நாட்டின் அழகு. நண்பர்களே தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை காட்டவும் உரையில் தொடக்கத்திலும் முடிவிழும் அதனை இசைக்க வேண்டும். அது பலமுறை புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்த உரையில் பல பத்திகள் உள்ளன. அதில் நான் உண்மை அடிப்படையில் அதில் நான் உடன்படவில்லை. நான் அவர்களுக்கு குரல் கொடுப்பது அரசியலமைப்பு கேலிக்கூத்து ஆகும். எனவே இந்த சபை பொறுத்தவரை எனது உரையை முடிக்கிறேன். இந்த சபையில் மக்களின் நலனுக்காக பயனுள்ள மற்றும் ஆரோக்கியமான விவாதமாக அமைய வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்நாடு. வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த் ஜெய் பாரத் நன்றி என அந்த வீடியோவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

13 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

13 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

14 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

15 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

15 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

16 hours ago

This website uses cookies.