ஆந்திர மாநிலம் ஏலூரூ மாவட்டத்தில் உள்ள ராமானுஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சூரிய சந்திரா. அவருடைய மனைவி லட்சுமி. தம்பதிகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து பிரச்சினைகள் நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மதியம் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மனைவியை சூரிய சந்திர கடுமையாக தாக்கினார்.
இதனால் வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்த மனைவி லட்சுமியை பிடித்த சூரிய சந்திரா அவரை கத்தியால் வெட்டி பலர் கண் முன் பட்டப் பகலில் படுகொலை செய்தார்.
பின்னர் அதே கத்தியை தன்னுடைய மோட்டார் சைக்கிளின் முன்புறம் வைத்து காவல் நிலையத்திற்கு செல்வது போல் புறப்பட்ட அவர் பின்னர் வீட்டுக்குள் சென்று வெளியில் வந்து அந்த கத்தியை எடுத்து அருகில் வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் அசால்டாக உட்கார்ந்து இருந்தார்.
கொலை சம்பவம் பற்றி கிராம பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் சூரிய சந்திராவை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.
லட்சுமி உடல் பிரேத பரிசோதனைக்காக ஏலூரூ அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.