பண்ணை வீட்டில் நடந்த முக்கிய சந்திப்பு : பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய மு.க.அழகிரி.. இதுதான் காரணம்?

முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி தனது பிறந்த நாளை பண்ணை வீட்டில் வைத்து ஆதரவாளர்களுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார் .

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி தனது பிறந்த நாளை முன்னிட்டு விக்கிரமங்கலம் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார்.

அவரது ஆதரவாளர்கள் மு க அழகிரிக்கு சால்வை அணிவித்தும் மாலை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர். முக அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தனது பிறந்தநாளை பொது வெளியில் கொண்டாடாமல் தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரி வீட்டிற்கு நேரில் சந்தித்து பேசினார்

இந்நிலையில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி உதயநிதி ஸ்டாலின் மற்றும் தயா அழகிரி ஆகியோர் இணைந்து இருப்பது போன்ற போஸ்டர்களை ஒட்டி அதன் மூலமாக மு.க.அழகிரிக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதே போன்று பல்வேறு பகுதிகளிலும் அழகிரியின் ஆதரவாளர்கள் மு.க. அழகிரியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

திமுகவில் கடந்த எட்டு ஆண்டுகளாக எந்தவித செயல்பாடுகளும் இல்லாமல் இருந்த அழகிரி ஆதரவாளர்கள் தற்பொழுது உதயநிதி ஸ்டாலினடனான சந்திப்பை தொடர்ந்து போஸ்டர் மூலமாக தங்களது பணிகளை தொடங்கியுள்ளதோடு அழகிரியின் பிறந்தநாளையும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.