டெல்லிக்கு போகும் செந்தில்பாலாஜி விவகாரம்? இன்றுடன் நிறைவடையும் காவல்.. அமலாக்கத்துறை போடும் புது கணக்கு!!

டெல்லிக்கு போகும் செந்தில்பாலாஜி விவகாரம்? இன்றுடன் நிறைவடையும் காவல்.. அமலாக்கத்துறை போடும் புது கணக்கு!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த 7-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும். கைது சட்டவிரோதம் இல்லை. கைது செய்ய அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உள்ளது என நீதிபதிகள் போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.

மேலும், செந்தில் பாலாஜியை வரும் 12ம் தேதி வரை 5 நாள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அன்றைய தினமே அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்தது.

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் இருக்கும் நிலையில், அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அமலாத்துறையின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாத்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 5 நாள் அமலாக்கத்துறை காவல் விதித்து, மீண்டும் 12-ஆம் தேதி செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி ஆணையிட்டார். இதனைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜியை அன்றை தினமே இரவு புழல் சிறையில் இருந்து அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று செந்தில் பாலாஜியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 9 மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டிருந்தது.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 மணி நேரத்துக்கு ஒருமுறை ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் விசாரணை அறைக்கு வெளியே மருத்துவர்கள் இருப்பதாவும் கூறப்பட்டது. மேலும், செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த 200க்கும் மேற்பட்ட கேள்விகளை அமலாக்கத்துறை தயார் செய்து, அதன்படி கேட்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் கடந்த 7-ஆம் தேதி இரவு முதல் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. எனவே விசாரணைக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், அமலாக்கத்துறையின் 5 நாள் காவல் இன்றுடன் முடிவதால், செந்தில் பாலாஜியை இன்று மாலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்ட பின், மீண்டும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

ஆனால், எதிர்பார்த்த கேள்விகளுக்கு அவரிடம் பதில்கள் வரவில்லை என்றால், அவருடைய காவலை நீட்டிக்க அமலாக்கத்துறை முறையிடவும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை, அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

11 minutes ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

55 minutes ago

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

3 hours ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

3 hours ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

3 hours ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

4 hours ago

This website uses cookies.