நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி அவர்கள் குறித்து மிகவும் கீழ்த்தரமாகவும் மக்களிடையே அவருடைய நற்பெயரை கெடுக்கும் விதமாகவும் தமிழ் திரைப்பட பாடல் ஒன்றை மாற்றி இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மறைந்த ஒரு நபரின் நட்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பேசுவது மிகப்பெரிய குற்றம் என்பதை தெரிந்தும் கள்ளத்தனம் செய்த காதகன் கருணாநிதி, சதிகாரன் கருணாநிதி, சண்டாளன் கருணாநிதி என்று மிகவும் கேவலமான சொற்களால் பொதுவெளியில் பாடியுள்ளார்.
இதை கண்டித்து சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான கனகவேல் பாண்டியன் இன்று மதுரை காவல்துறை ஆணையாளர் இடத்தில் புகார் மனு அளித்தார்.
ஏற்கனவே இதே பாடலை பாடி நாம் தமிழர் கட்சி பிரமுகர் சாட்டை துரைமுருகன் நேற்று காலை கைது செய்யப்பட்டு மாலையில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
தற்போது அதே பாடலை பாடிய சீமான், முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என சவால் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.