நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி அவர்கள் குறித்து மிகவும் கீழ்த்தரமாகவும் மக்களிடையே அவருடைய நற்பெயரை கெடுக்கும் விதமாகவும் தமிழ் திரைப்பட பாடல் ஒன்றை மாற்றி இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மறைந்த ஒரு நபரின் நட்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பேசுவது மிகப்பெரிய குற்றம் என்பதை தெரிந்தும் கள்ளத்தனம் செய்த காதகன் கருணாநிதி, சதிகாரன் கருணாநிதி, சண்டாளன் கருணாநிதி என்று மிகவும் கேவலமான சொற்களால் பொதுவெளியில் பாடியுள்ளார்.
இதை கண்டித்து சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான கனகவேல் பாண்டியன் இன்று மதுரை காவல்துறை ஆணையாளர் இடத்தில் புகார் மனு அளித்தார்.
ஏற்கனவே இதே பாடலை பாடி நாம் தமிழர் கட்சி பிரமுகர் சாட்டை துரைமுருகன் நேற்று காலை கைது செய்யப்பட்டு மாலையில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
தற்போது அதே பாடலை பாடிய சீமான், முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என சவால் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.