சாதிவெறி பிரச்சனை… கூட்டணியில் இருந்து எதிர்ப்பு : திமுகவுக்கு கடும் எச்சரிக்கை கொடுத்த விசிக!!!

சாதிவெறியால் கூட்டணியில் இருந்து எதிர்ப்பு … திமுகவுக்கு கடும் எச்சரிக்கை கொடுத்த விசிக!!!

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் குல தெய்வ கோயிலுக்கு மாடு ஒன்றை நேர்ந்து விட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்த மாடு காணவில்லை.
மாட்டை தேடி சென்ற மக்கள், மாடு மாற்று சமூகத்தினரின் நிலத்தில் வெட்டப்பட்டு சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏற்கனவே மாடு தங்களது நிலத்தில் மேய்வதாக இரு சமூகத்தினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து இந்த மாடு மாற்று சமூகத்தினரால்தான் வெட்டப்பட்டிருப்பதாக கூறி பட்டியலின மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றன.

ஆனால் இந்த விவகாரத்தில் போலீஸ் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அவர் x சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளதாவது, “மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா, கொட்டாம்பட்டி ஒன்றியம், பால்குடியில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த மக்கள் நொண்டிச்சாமி கோவிலுக்கு மாடு ஒன்றை நேர்ந்து விட்டுள்ளனர்.

காட்டுப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டை, அம்மாசி உள்ளிட்ட சிலர் ‘பறப்பயலுக மாடு எங்க காட்டுல எப்படிடா மேயலாம்’ என சாதி வெறியோடு அரிவாளால் மாறி மாறி வெட்டியுள்ளனர்.

இது குறித்து கொட்டாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் மனுதாரர் மதிராஜா அவர்களின் அனுமதியின்றி ‘பறையன்’ என்ற வார்த்தையை பேனாவால் அடித்து, கொட்டாம்பட்டி காவலர் சாதிய நோக்கிலும் சாதி வெறியர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டுள்ளனர்.

இதுவரை கோவில் மாட்டை வெட்டிய சாதி வெறியர்கள் கைது செய்யப்படவில்லை. சாதி வெறியர்களை பாதுகாக்கும் காவல்துறையினரால் அப்பகுதியில் பெரும் அச்சமே மேலிடுகிறது” என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் விசிக சார்பில் அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கட்சியினர் கூறியுள்ளனர்.

கோயிலுக்காக நேர்ந்துவிடப்பட்ட மாடு மாற்று சமூகத்தினரால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மேலூரில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.