5 நாட்கள் வரை நீடித்த ரெய்டு.. ஆஜராக சம்மன் : ஜெகத்ரட்சனுக்கு அதிர்ச்சி கொடுத்த வருமான வரித்துறை!!!
கடந்த 5 நாட்களாக நீடித்த சோதனைக்கு பிறகு திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சில நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவள்ளூர், திருப்பூரில் ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய கல்வி நிலையங்கள், மருத்துவமனை, மருத்துவ கல்லூரி, ஹோட்டல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று வரை 5 நாட்களாக சோதனை நடைபெற்றது.
அதுமட்டுமில்லாமல், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்து சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டது. இந்த சோதனையில் வரி ஏய்ப்பு புகாரில் கணக்கில் வராத பணம் மற்றும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதில், 4.5 கோடி ரூபாய் பணம் 2.7 கிலோ மதிப்பிலான தங்க நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் நேற்று சுமார் 10 மணிநேரம் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மருமகன் நாராயணசாமி இளமாறன், மகள் ஸ்ரீனிசா ஆகியோரிடம் தனித்தனியாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர் எனவும் கூறப்பட்டது.
ஜெகத்ரட்சகன் நடத்தி வந்த அறக்கட்டளையின் வரி விலக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினார். இந்த நிலையில், 5 நாட்கள் நாட்கள் நடைபெற்ற சோதனை நேற்று நிறைவு பெற்ற நிலையில், திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
This website uses cookies.