‘மனிதநேயம் பேசி வைரலான சிறுவன் அப்துல் கலாம்’: வீடின்றி தவித்த குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் வீடு ஒதுக்கீடு..!!

மனித நேயம் மற்றும் மதங்களை கடந்த ஒற்றுமை குறித்து பேசிய சிறுவன் அப்துல்கலாமிற்கு தமிழக அரசு சார்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

தனியார் இணையதள தொலைக்காட்சி ஒன்று சமீபத்தில் பள்ளி மாணவர்களிடம் கர்நாடக ஹிஜாப் விவகாரம் கருத்து கேட்டது. அதற்கு சென்னை கண்ணகி நகரை சேர்ந்த அப்துல்கலாம் என்ற சிறுவன் அளித்த பதில் இணையத்தில் வைரலானது.

அந்த பேட்டியில் பேசிய சிறுவன், ‘உலகத்துல அனைவரும் சமம், நம்ப யாரையும் புடிக்காதுன்னு முடிவு எடுக்க முடியாது. எல்லாரும் நம்பளை மாதிரிதான். யாரையும் புடிக்காதுன்னு சொல்லாதீங்க என்று மனிதநேயம் பற்றியும், மதங்களை தாண்டி இருக்க வேண்டிய ஒற்றுமை குறித்து மிக அழகாக பேசியிருந்தார் அப்துல் கலாம்.

இந்நிலையில் மாணவன் அப்துல் கலாமுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும், அவரை பாராட்டும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்திருந்தார். தலைமைச்செயலகத்தில் தனது பெற்றோருடன் சென்ற சிறுவன் அப்துல் கலால் முதலமைச்சர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

மேலும் சிறுவனின் தாயை பொறுத்தவரை அவர் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மாணவி. வர்தா புயலின்போது தங்களது வீட்டினை பறிகொடுத்தாக கூறினார். மேலும் சிறுவனின் பேட்டி வைரலானதையடுத்து அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர் வலியுறுத்தியுள்ளார்.

இதனால், தங்களுக்கு வீடு வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்த நிலையில், சிறுவன் அப்துல் கலாம் குடும்பத்திற்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஆணை நாளை வழங்கப்படும் என நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் அமைச்சர் தா. மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

5 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

6 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

6 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

6 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

8 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

8 hours ago

This website uses cookies.