வேலூர் அடுத்த ஓசூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராஜ் இவர் அருகில் உள்ள ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் பணிபுரிந்து வருகிறார் இவரது மனைவி சரண்யா இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது
இந்த நிலையில் ராமராஜ் ஆடி மாதம் துவங்கியதை அடுத்து தன் மனைவியை அழைத்து கொண்டு அமிர்தி அருகே நஞ்சு கொண்டபுரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் விட்டு விட்டு வருவதற்காக நேற்று திங்கட்கிழமை சென்றுள்ளார்.
வழக்கம் போல் இன்று காலை ராமராஜ் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவும் உடைக்கப்பட்டு நகை பெட்டியில் இருந்த 10.5 சவரன் தங்க நகை 250 கிராம் வெள்ளி கால் கொலுசு ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
தூக்கிச் சென்ற நகைப்பெட்டியை தங்க நகைகளை எடுத்துக்கொண்டு அங்குள்ள பகுதியில் விவசாய நிலம் அருகே தூக்கி வீசி விட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த அரியூர் போலீசார் இந்த திருட்டு சம்பவத்தை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.