பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துரை கிராமத்தை சேர்ந்த தடா பெரியசாமி என்பவர் பாஜக எஸ்சி அணி மாநில தலைவராக உள்ளார்.
இவர் நேற்றிரவு வழக்கம் போல தனது காரை வீட்டின் முன் நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் அவரது வீட்டுக்குள் நுழைந்நது காரை கற்கள் மற்றும் கட்டையால் அடித்து நொறுக்கியுள்ளனர்.
மேலும் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடினர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தடா பெரியசாமி கட்சி நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மங்கலமேடு காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, SC அணி மாநிலத் தலைவர் திரு தடா பெரியசாமி அவர்கள் வீட்டின் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தி, அவரது வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். சமூக விரோதிகளின் இந்தச் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
தடா பெரியசாமி போன்ற உண்மையான சமூக நீதிக்கு உழைக்கும் பாஜக தலைவர்களின் செயல்பாடுகள், போலி சமூக நீதி பேசிக் கொண்டிருப்பவர்களை எந்த அளவுக்கு அச்சுறுத்தியிருக்கிறது என்பது இது போன்ற நிகழ்வுகளில் இருந்து தெரிகிறது.
இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. ஏழை எளிய மக்களுக்கான எங்கள் பணிகளை, இது போன்ற கோழைத்தனமான செயல்களால் தடுக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
This website uses cookies.