எங்களுக்குள்ளும் இருக்கிறார் “ராம்”… உங்களுக்குள்ளும் இருக்கிறார் “ராம்” : முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் தமிழிசை பதிலடி!
இன்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், காமாலைக் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்களே அந்த நிலையில்தான் இருக்கிறார், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கொஞ்சமும் அறியாமல் தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பில் உள்ள மதிப்பிற்குரிய ஆர்.என்.ரவி அவர்கள். தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள், பக்தியை தங்களின் தனிப்பட்ட உரிமையாக, அகமகிழ்வாக, ஆன்மத் தேடலாகக் கொண்டவர்கள். அவர்கள் பெருமானையும் வழிபடுவார்கள். பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள். பிற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள் என கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆளுநர் தமிழிசை அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில், பெரியாரும் பெருமாளும் ஒன்று என்று சொல்வா “ராம்” பெரியார் தொண்டர்களை ஆராதிப்பா “ராம்”
ஆனால் பெருமாள் பக்தர்களுக்கு வாழ்த்து சொல்ல மாட்டா “ராம்” அனைத்து மதத்தையும் சமமாக பாவிக்கிறா”ராம்” ஆனால் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லமாட்டா “ராம்”
ராமனை நீங்கள் விடுக்க முடியாது….ராமனை நீங்கள் தடுக்க முடியாது….
எங்களுக்குள்ளும் இருக்கிறார் “ராம்”….உங்களுக்குள்ளும் இருக்கிறார் “ராம்”….
அதனால்தான் அன்று செருப்பு மாலை போட்டவர்களை
நெருப்பில் சுடுகிறார் “ராம்”….வெறுப்பை உமிழும் கறுப்பு இயக்கங்களை விரட்டி பொறுப்பாய் ஆசி வழங்கும் ராமன் – அதுவே
நம் தமிழ்நாட்டுக்கு வரப்போகும் ராமராஜ்ஜியம்…..
எம் தமிழ்நாட்டில் என்ன சிறப்பு எனில்….எந்நாட்டிலும் ராம்நாடு இல்லை தமிழ்நாட்டில் ஓர் மாவட்டமே “ராம்”நாடு அதனால் தான் சீதையை தேடிய ராமனை… அங்கு தேடி மோடி வந்தார்..உல்லாச பயணம் வரவில்லை….
11- நாள் உபவாசம் இருந்து பக்தியோடு வந்தார்.
அனைவரையும் சமமாக மதித்து சமூக நீதிக்கு வித்திட்ட நாயகனாக திகழ்ந்த ராமரை சமூக நீதிக்கு எதிரானவராக சித்தரித்து ஈரோட்டில் விதைத்த விஷ விதையை ஒழிக்க தேரோட்டியின் தமையனாய் வந்தான் ராமன்….
ராமனை பழித்து பிழைத்துவிடலாம் என நினைத்து ஒரு கூட்டம் அன்று….
இன்று கூட்டம் கூட்டமாக ராமனை வழிபட்டு தழைக்கப்போகிறது பெருங்கூட்டம் ராமராஜ்ஜியத்தில்..அனைவர் கண்ணிலும் ஒளியாய் இருக்கும் ராமனை..காணொளியில் பார்க்க தடையாம்- தமிழகத்தில்….
வழக்கமாய் நடக்க வேண்டியதை வழக்காடு மன்றம் சென்று…வென்று பெற்றவர்களுக்கு எத்தனை எதிர்ப்பு வந்தாலும் ராமன் தன் நாடு திரும்பிவிட்டான்…..தமிழ்நாடும் திரும்பி விட்டான்…விரும்பி வணங்கிட தமிழர்கள் தயார்…தடை ஏற்படுத்தப்பட்டால் தடைகள் தகர்த்தெறியப்படும்…கத்தியால் அல்ல…. பக்தியால்…மக்கள் சக்தியால்…ஜெய்ஸ்ரீராம்….ஜெய்ஸ்ரீராம்….ஜெய்ஸ்ரீராம்….என்று ஒலிக்கட்டும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என பதிவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.