எங்களுக்குள்ளும் இருக்கிறார் “ராம்”… உங்களுக்குள்ளும் இருக்கிறார் “ராம்” : முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் தமிழிசை பதிலடி!
இன்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், காமாலைக் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்களே அந்த நிலையில்தான் இருக்கிறார், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கொஞ்சமும் அறியாமல் தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பில் உள்ள மதிப்பிற்குரிய ஆர்.என்.ரவி அவர்கள். தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள், பக்தியை தங்களின் தனிப்பட்ட உரிமையாக, அகமகிழ்வாக, ஆன்மத் தேடலாகக் கொண்டவர்கள். அவர்கள் பெருமானையும் வழிபடுவார்கள். பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள். பிற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள் என கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆளுநர் தமிழிசை அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில், பெரியாரும் பெருமாளும் ஒன்று என்று சொல்வா “ராம்” பெரியார் தொண்டர்களை ஆராதிப்பா “ராம்”
ஆனால் பெருமாள் பக்தர்களுக்கு வாழ்த்து சொல்ல மாட்டா “ராம்” அனைத்து மதத்தையும் சமமாக பாவிக்கிறா”ராம்” ஆனால் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லமாட்டா “ராம்”
ராமனை நீங்கள் விடுக்க முடியாது….ராமனை நீங்கள் தடுக்க முடியாது….
எங்களுக்குள்ளும் இருக்கிறார் “ராம்”….உங்களுக்குள்ளும் இருக்கிறார் “ராம்”….
அதனால்தான் அன்று செருப்பு மாலை போட்டவர்களை
நெருப்பில் சுடுகிறார் “ராம்”….வெறுப்பை உமிழும் கறுப்பு இயக்கங்களை விரட்டி பொறுப்பாய் ஆசி வழங்கும் ராமன் – அதுவே
நம் தமிழ்நாட்டுக்கு வரப்போகும் ராமராஜ்ஜியம்…..
எம் தமிழ்நாட்டில் என்ன சிறப்பு எனில்….எந்நாட்டிலும் ராம்நாடு இல்லை தமிழ்நாட்டில் ஓர் மாவட்டமே “ராம்”நாடு அதனால் தான் சீதையை தேடிய ராமனை… அங்கு தேடி மோடி வந்தார்..உல்லாச பயணம் வரவில்லை….
11- நாள் உபவாசம் இருந்து பக்தியோடு வந்தார்.
அனைவரையும் சமமாக மதித்து சமூக நீதிக்கு வித்திட்ட நாயகனாக திகழ்ந்த ராமரை சமூக நீதிக்கு எதிரானவராக சித்தரித்து ஈரோட்டில் விதைத்த விஷ விதையை ஒழிக்க தேரோட்டியின் தமையனாய் வந்தான் ராமன்….
ராமனை பழித்து பிழைத்துவிடலாம் என நினைத்து ஒரு கூட்டம் அன்று….
இன்று கூட்டம் கூட்டமாக ராமனை வழிபட்டு தழைக்கப்போகிறது பெருங்கூட்டம் ராமராஜ்ஜியத்தில்..அனைவர் கண்ணிலும் ஒளியாய் இருக்கும் ராமனை..காணொளியில் பார்க்க தடையாம்- தமிழகத்தில்….
வழக்கமாய் நடக்க வேண்டியதை வழக்காடு மன்றம் சென்று…வென்று பெற்றவர்களுக்கு எத்தனை எதிர்ப்பு வந்தாலும் ராமன் தன் நாடு திரும்பிவிட்டான்…..தமிழ்நாடும் திரும்பி விட்டான்…விரும்பி வணங்கிட தமிழர்கள் தயார்…தடை ஏற்படுத்தப்பட்டால் தடைகள் தகர்த்தெறியப்படும்…கத்தியால் அல்ல…. பக்தியால்…மக்கள் சக்தியால்…ஜெய்ஸ்ரீராம்….ஜெய்ஸ்ரீராம்….ஜெய்ஸ்ரீராம்….என்று ஒலிக்கட்டும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என பதிவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
This website uses cookies.