கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்ல.. பாத்ரூம் பக்கெட்டை கொடுத்து அள்ள சொல்லி இருக்காங்க : கமல்ஹாசன் வேதனை!!

கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்ல.. பாத்ரூம் பக்கெட்டை கொடுத்து அள்ள சொல்லி இருக்காங்க : கமல்ஹாசன் வேதனை!!

மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் உடமைகளை முற்றிலும் சீரழிந்தது. அதே நேரத்தில் எண்ணூர் மற்றும் மணலி பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீரோடு சேர்ந்து சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியான எண்ணெய் கசிவு பொதுமக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. வீடுகள், தோட்டங்கள், வாகனங்கள் என அனைத்தையும் சீரழித்து கடலில் சென்று கலந்துள்ளது.

ஙஇதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வடசென்னை திருவொற்றியூரை அடுத்த எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் தொழிற்சாலையில் இருந்து வெளிவந்த ஆயுள் கழிவுகள் முகத்துவாரம் பகுதி முழுவதும் படர்ந்து இதனால் 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் பாதிப்படைந்தனர் மீன்கள் அதிக அளவில் செத்து மிதந்தது இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது.

இதனையடுத்து எண்ணெய் கசிவுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணியில் துறை வல்லுநர்களை பயன்படுத்தாமல் மீனவர்களை பயன்படுத்துவதற்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்தநிலையில், எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் ஆயில் படிந்துள்ள இடங்களில் மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் சமூக ஆர்வலர்கள் மீனவ சங்க நிர்வாகிகளுடன் படகில் சென்று ஆய்வு செய்தார்.

காட்டுக்குப்பம் பகுதியில் இருந்து படகில் முகத்துவாரம் வரை சென்று ஆயில் படிந்த பகுதிகளை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமலஹாசன், இங்கு நான் பலமுறை வந்துள்ளேன். கடந்த காலத்தைவிட பாதிப்பு அதிகமாக தான் இருக்கிறது. நீதிமன்ற உத்தரவுப்படி இன்றுக்குள் எண்ணெய் கழிவு அகற்றுவது போல் ஒரு அறி குறியும் தென்படவில்லையென கூறினார்.

எண்ணெய் கழிவு விவகாரத்தில் ஒருவருக்கு ஒருவர் நான் இல்லை, நீ இல்லை என மாற்றி மாற்றி பழி போட்டு வருகின்றனர். எண்ணெய் கழிவு அகற்றுவதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. இங்குள்ள கழிவுகளை அகற்ற நிபுணர்கள் இல்லை. மீனவர்களே கழிவுகளை அகற்றி வருகின்றனர். எண்ணெய் கழிவை அகற்றும் வேலைக்கு வெறும் பாத்ரூம் பக்கெட்டை கொடுத்து அகற்றச் சொல்வது மனிதாபிமானம் அற்ற செயல். இந்த விவகாரத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை தேவை. கடுமையான சட்ட நடவடிக்கை இருந்தால் தான் அச்சம் ஏற்படும் என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

6 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

7 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

8 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

8 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

8 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

9 hours ago

This website uses cookies.