புதிய நாடாளுமன்றம் ரொம்ப பாதுகாப்புனு சொன்னாங்க.. ஆனா அதைவே காப்பாத்த முடியல.. மக்களை எப்படி? பாஜக மீது சீறும் அரசியல் பிரமுகர்!

புதிய நாடாளுமன்றம் ரொம்ப பாதுகாப்புனு சொன்னாங்க.. ஆனா அதைவே காப்பாத்த முடியல.. மக்களை எப்படி? பாஜக மீது சீறும் அரசியல் பிரமுகர்!

புதிய நாடாளுமன்றம் ரொம்ப பாதுகாப்புனு சொன்னாங்க.. ஆனா அதைவே காப்பாத்த முடியல.. மக்களை எப்படி? பாஜக மீது சீறும் அரசியல் பிரமுகர்!

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் 2001 ஆம் ஆண்டு இதே நாளில் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி ஒன்றியத்தில் இருந்தபோது நாடாளுமன்ற வளாகத்திற்குள் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது என்றும், 22 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்திற்குள் மக்களவையில் மோடி தலைமையிலான ஆட்சியின் போது இன்று தாக்குதல் நடைபெற்றுள்ளது இதனை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

மக்களவையில் புகை குண்டு வீசியவர்கள் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட்டு மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும். புகை கொண்டு வீசியவர்களை மக்களவைக்குள் நுழைவதற்கான அனுமதி சீட்டு பரிந்துரையை கர்நாடக மாநில மைசூர் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் பிரதாப் சிம்ஹா என்பவர் வழங்கியுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பை மீறி இந்த இருவரும் மக்களவைக்குள் நுழைந்திருப்பது மோடி ஆட்சியில் மக்களின் பாதுகாப்பை கேள்வி குறி ஆக்கியுள்ளது என்று தெரிவித்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் மிகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் ஒன்றிய அரசின் சார்பாக விளம்பரம் செய்யப்பட்டது.

இத்தகைய அறிவிப்பெல்லாம் வெறும் வாய்சவடால்கள் என்பதை இன்றைய பயங்கர சம்பவம் எடுத்துக்காட்டி உள்ளது. நீட் தேர்வு எழுத போன மாணவர்களை பயங்கரவாதிகளை போல் பரிசோதிக்கும் போது புகை குண்டுகளை எடுத்து வந்த விஷமிகளை எப்படி அனுமதித்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.