விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் தொல் திருமாளவன். இவர் சிதம்பரம் தொகுதியின் எம்பியாகவும் இருக்கிறார். இந்நிலையில் தான் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 2003ம் ஆண்டில் மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதமாற்ற தடை சட்டத்தை கண்டித்து பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு கட்சியின் தலைவரான திருமாவளவன் தலைமையேற்று இருந்தார்.
இந்த பேரணியின்போது திடீரென்று கலவரம் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு என்பது மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் ஆஜராகும்படி திருமாவளவனுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் திருமாவளவன் வழக்கில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில் தான் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி ஆர் விஜய குமாரி திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டார்.
திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தது மற்றும் வழக்கறிஞர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்யாமல் இருந்தது உள்ளிட்ட காரணங்களால் இந்த பிடிவாரண்ட் என்பது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கு என்பது ஆகஸ்ட் 27 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திருமாவளவனுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டால் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு திருமாவளவன் ஆளாகலாம். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கவலையடைந்துள்ளனர். மேலும் திருமாவளவன் வழக்கில் அடுத்து என்ன? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
அனிருத்-காவ்யா மாறன் காதல்? தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”,…
வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…
This website uses cookies.