கள்ளசாராயம் குடித்து உயிரிலந்தோர் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருப்பது தவறை ஊக்குவிக்கும் அறிவிப்பாக பொருள் கொள்ள வேண்டியது இல்லை என்று மதுரையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் மக்கள் அதிகாரம் இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:- தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து இவ்வளவு பேர் உயிரிழந்துள்ள செய்தி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு அளித்தாலும், கள்ளசாராயத்தை விற்பனை செய்தவர்கள் கைது செய்திருந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
திமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த உறுதி அளிக்கப்பட்ட நிலையிலும், தற்போது வரையில் மது விற்பனையை அனுமதித்தும் கூட கள்ளசாராயம் புழங்குகிறது. எனவே, கள்ளசாராயத்தை ஒழிப்பு மற்றும் மது விலக்கு அமல்படுத்துவது குறித்தும் தமிழக முதல்வர் சிந்திக்க வேண்டும். ஒரு சில அதிகாரிகளின் தவறான நடவடிக்கையை முன்வைத்து அரசின் செயல்பாடுகளை மொத்தமாக புறக்கணிக்க முடியாது. கொள்கை அடிப்படையில் திமுக கூட்டணியை விசிக ஆதரிக்கிறது.
மரக்காணம் பகுதியில் பல ஆண்டுகளாக மக்களுக்கு கள்ளச்சாராய பயன்பாடு இருந்து வந்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் உடந்தையாக இருந்த அதிகாரிகள் அனைவரும் தண்டித்து களையெடுக்கப்பட வேண்டும். உயிரிழந்த நபர்களின் குடும்பத்தை கருத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள இழப்பீட்டை ஏற்க வேண்டியுள்ளதே தவிர, இழப்பீடு தவறை ஊக்குவிக்க கூடுவதாக என பொருள்பெறக் கூடாது என கூறினார்.
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள்…
ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…
ஹிட் அடித்த ஹிட் 3 தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச்…
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
This website uses cookies.