அதிமுக – பா.ஜ.க கூட்டணி இருக்கும் வரை எத்தனை மாநாடு நடத்தினாலும், எத்தனை பேரணி நடத்தினாலும் அதிமுகவுக்கு பின்னடைவை தான் தரும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு அடுத்த மேலேரிபாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட அலுவலகத்தில் விடுதலைகள் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குத்து விளக்கு ஏற்றி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் புகைப்படத்திற்க்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இது அவரின் அகந்தை போக்கை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது. ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மிகவும் கொச்சைபடுத்துகின்றார். ஆளுநர் அரசுக்கு எதிராக செயல்படுவது திமுக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திட முடியும் என ஆளுநர் கருதுவது வேடிக்கையாக இருக்கின்றது.
இந்திய பிரதமரும், ஒன்றிய அரசும் தமிழக ஆளுநரின் போக்கை வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல. தமிழக ஆளுநரை உடனே திரும்ப பெற வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தொடர்ந்து அவமதிப்பதும், அலட்சியப்படுத்துவதும் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல, தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை இது காயப்படுத்துவதாக உள்ளது.
மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையை மறு உறுதி செய்திட இந்த மாநாடு நடைபெற்றது, இந்த மாநாடு தமிழ்நாடு மக்கள் நம்பிக்கையை பெறுவதாக அமைந்திடவில்லை. தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பு இல்லை, அதிமுக மதுரை மாநாட்டில் நடைபெற்ற கூத்து பொதுமக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதிமுக – பாரதிய ஜனதா கட்சியின் கூட்டனியில் உறவில் இருக்கும் வரையிலும், கூட்டணியில் தொடர்கிற வரையிலும் அதிமுக எத்தனை மாநாட்டு நடத்தினாலும், எத்தனை பேரணி நடத்தினாலும், அது பின்னடைவாக தான் போய் முடியும், என தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கருத்துக்களை காமெடி மூலமாக கொண்டு…
கமல்ஹாசனா இப்படி செய்தது? தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் இன்னும் அவரது ரசிகர்களின் மனதில் உலக நாயகனாகவே…
பொதுவெளியில் பிரபலங்களுக்கு திடீரென சங்கடங்கள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் ஒரு சிலர் அணிந்து வரும் ஆடையும் அப்படி சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.…
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
This website uses cookies.