அதிமுக – பா.ஜ.க கூட்டணி இருக்கும் வரை எத்தனை மாநாடு நடத்தினாலும், எத்தனை பேரணி நடத்தினாலும் அதிமுகவுக்கு பின்னடைவை தான் தரும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு அடுத்த மேலேரிபாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட அலுவலகத்தில் விடுதலைகள் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குத்து விளக்கு ஏற்றி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் புகைப்படத்திற்க்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இது அவரின் அகந்தை போக்கை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது. ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மிகவும் கொச்சைபடுத்துகின்றார். ஆளுநர் அரசுக்கு எதிராக செயல்படுவது திமுக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திட முடியும் என ஆளுநர் கருதுவது வேடிக்கையாக இருக்கின்றது.
இந்திய பிரதமரும், ஒன்றிய அரசும் தமிழக ஆளுநரின் போக்கை வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல. தமிழக ஆளுநரை உடனே திரும்ப பெற வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தொடர்ந்து அவமதிப்பதும், அலட்சியப்படுத்துவதும் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல, தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை இது காயப்படுத்துவதாக உள்ளது.
மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையை மறு உறுதி செய்திட இந்த மாநாடு நடைபெற்றது, இந்த மாநாடு தமிழ்நாடு மக்கள் நம்பிக்கையை பெறுவதாக அமைந்திடவில்லை. தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பு இல்லை, அதிமுக மதுரை மாநாட்டில் நடைபெற்ற கூத்து பொதுமக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதிமுக – பாரதிய ஜனதா கட்சியின் கூட்டனியில் உறவில் இருக்கும் வரையிலும், கூட்டணியில் தொடர்கிற வரையிலும் அதிமுக எத்தனை மாநாட்டு நடத்தினாலும், எத்தனை பேரணி நடத்தினாலும், அது பின்னடைவாக தான் போய் முடியும், என தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
This website uses cookies.