திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 14 வார்டுகளில் திமுக கூட்டணியும், 1 அதிமுக வேட்பாளரும், 3 சுயேட்சைகளும் வெற்றி பெற்றிருந்தனர். திமுக சார்பில் தலைவர் வேட்பாளராக 11வது வார்டில் வெற்றி பெற்ற சுமதி தமிழ்உதயன் அறிவிக்கப்பட்டிருந்தார்.
இன்று காலை தலைவர் பதவிக்கு திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுமதி தமிழ்உதயன் மற்றும் 10வது வார்டில் வெற்றி பெற்ற அதிருப்தி வேட்பாளர் ருக்மணி மோகன்ராஜ் ஆகிய இருவர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து மீஞ்சூர் பேரூராட்சி கூட்ட அரங்கில் மறைமுக வாக்கெடுப்பு நடைபெற்றது.
மறைமுக வாக்கெடுப்பு முடிவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் அதிருப்தி வேட்பாளர் ருக்மணி மோகன்ராஜ் 9 வாக்குகள் பெற்றார்.
திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சுந்தரத்தின் மருமகளை குலுக்கல் முறையில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகலிங்கத்தின் மருமகளும், நகர செயலாளரின் மனைவியுமான ருக்மணி எதிர்த்துப் போட்டியிட்டு குலுக்கல் முறையில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.