சென்னை மாநகர வரலாற்றில் இதுவே முதன்முறை…. தமிழக அரசு சார்பில் மலர் கண்காட்சி : ஜூன் 3ல் துவக்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி அன்று சென்னையில் தமிழக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூன் 3 கருணாநிதி பிறந்தநாள் அன்று சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.

சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 3 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை நடைபெறும் மலர் கண்காட்சியை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

கருணாநிதி உருவ வடிவில் மலர் அலங்காரம், ஓராண்டின் சாதனையை விளக்கும் வகையில் மலர் கண்காட்சி வடிவமைக்கப்படுகிறது.

ஜூன் 3-ஆம் தேதி மலர் கண்காட்சியை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்த பின்னர் 5-ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புனே, பெங்களூரு, ஊட்டி, ஒசூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட வகையிலான மலர்களால் கண்காட்சி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 3-ஆம் தேதி முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தை, அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என சட்டப் பேரவையில் முதல்வா் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவ சிலை, சென்னையில் வருகிற 28-ஆம் தேதி திறக்கப்படுகிறது. சிலையை குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு திறந்துவைக்கிறாா்.

சென்னை ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் உள்ள பல்நோக்கு உயா்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கருணாநிதிக்கு ரூ.1.56 கோடி செலவில் சிலை அமைக்கப்பட்டு வரும் நிலையில், ஜூன் 3 கருணாநிதி பிறந்தநாள் அன்று சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

4 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

5 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

6 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

6 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

7 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

8 hours ago

This website uses cookies.