தூத்துக்குடி : தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர், செயலர் தலைமையில் உயர் மட்ட குழுவினர் சுமார் 4 மணி நேரம் ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு மூடி சீல் வைத்தனர். இந்நிலையில், நான்கு ஆண்டுகளாக மூடி இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையில் எந்தவித அசம்பாவித சம்பவம் நடந்து விட கூடாது என்பதற்காக சென்னையில் இருந்து வந்துள்ள தமிழக மாசுகட்டுபாட்டு வாரிய செயலர் கண்ணன் தலைமையில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் ரவிச்சந்திரன், துணை இயக்குனர் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் விஜயகுமார் உள்ளிட்ட ஆய்வுக் குழுவினர் மற்றும் மற்றும் வருவாய் துறையினர் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் மாநகராட்சி பொறியாளர் உள்ளிட்ட உயர் மட்ட குழுவினர் 20 பேர் இன்று காலை ஒன்பது மணிக்கு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஸ்டெர்லைட் ஆலையில் வைக்கப்பட்டுள்ள சிப்சம் வெளியேற்றுவதற்காகவும், மேலும் இயந்திரங்கள் செயல்பாடு குறித்தும் ஆய்வு மேற்கண்டதாக கூறப்படுகிறது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வை முடித்துக்கொண்டு அதிகாரிகள் வெளியேறினர். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலையின் மாசுகட்டுப்பாட்டு குழுவானது, ஆய்வு அறிக்கையை தமிழக அரசுக்கு தாக்கல் செய்து உச்சநீதிமன்றத்தில் வழங்கப்படும். மேலும், ஆலையில் உள்ள கெமிக்கல், இயந்திரம் ஆகியவை ஆய்வு மேற்கொண்டோம். அதில் ஆலை 4 வருடம் இயங்காததால் பல இடங்களில் துருப்பிடித்து மோசமான சூழ்நிலையில் இருப்பதாக கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.